India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள இரு குடோன்கள் இயங்கி வருகின்றது. இந்த குடோனில் இன்று அதிகாலை தீடிரென தீ விபத்து ஏற்பட்டு தீயானது மல மலவென குடோன் முழுவதும் பரவி தற்போது கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் குடோனை சுற்றி உள்ள குடியிருப்பு வாசிகள் அப்பூரவ படுத்து உள்ளனர். இந்த தீயை அணைக்க 7 தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள ஊத்தங்கரை அடுத்த கல்லாவி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, கிரிகேபள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரம்பட்டி, வீராச்சிகுப்பம், சூளகரை ஓலப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என போச்சம்பள்ளி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள்.<
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர www.tnmedicalselection.org இணையத்தில் விண்ணப்பித்து மாணவ /மாணவியர் சேர்க்கை பெறுமாறு கல்லூரி முதல்வர் மரு.எம்.பூவதி., கூறியுள்ளார்.O.T Assist, DMLT, Emergency Tech, Anaesthesia உள்ளீட்டு பிரிவுகளுக்கு 85 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருநங்கை/ திருநம்பி/ இடைப்பாலின நபர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாக, குறை தீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிப்.14 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11.00 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. குறைதீர்க்கும் முகாமில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கை / திருநம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்காரப்பேட்டை போலீசார் அப்பகுதியில் வேகமாக சென்ற வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, பழம் ஏற்றி வந்த அந்த வாகனத்தில் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 30 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டனர். உடனே அந்த குட்காவை பறிமுதல் செய்ததுடன் அதில் இருந்த பெங்களூருவை சேர்ந்த அப்பு (வயது 32), கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜய் (30) ஆகிய 2 பேரை சிங்காரபேட்டை போலீசார் கைது செய்தனர்.
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
ராயக்கோட்டை அருகே தெருநாய் கடித்ததில் 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 5 நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கு செல்லும்போது நாய் கடித்ததை, வீட்டில் தெரிவிக்காமல் இருந்துள்ளார். திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே மருத்துவமனை அழைத்துச் சென்றபோது, இதை கூறியுள்ளார். உயர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஆம்புலன்சில் சிறுவனின் உயிர் பிரிந்தது.
ரகசிய கேமரா விவகாரத்தில் கிருஷ்ணகிரி நகர செயலாளர் அடிப்படை உறுப்பினரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு என 2 ஆக பிரிக்கப்பட்டு 2 நகரங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி கிழக்கு நகர பொறுப்பாளராக எம்.வேலுமணியும், மேற்கு நகர பொறுப்பாளராக அஸ்லம் ரகுமான் ஷெரீப்பும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.