India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பணிகள் காரணமாக இன்று (19-02-2025) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள சிங்காரப்பேட்டை, மாட்ராபள்ளி, எழூர் சிங்காரப்பேட்டை, ரெட்டிவல்சை, அத்திப்பாடி, பாவக்கல், மாதரப்பள்ளி மாதப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம் எழூர் எழூர், சிம்மனபுதூர், கீழ்மாத்தூர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
வேப்பனப்பள்ளி அடுத்த பூதிமுட்லுவை சேர்ந்தவர் விவசாயி சுரேஷ்(38). இவரது 4 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்தார். நில அளவையர் ஜெயகாந்த் (29), சுரேஷிடம் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சுரேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரையின் படி பணத்தை ஜெயகாந்தனிடம் கொடுத்த போது போலீசார் அவரையும் திலீப்குமார் என்பவரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினர் இன்று 18.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ரோந்து பணியில் இடுபடுகின்றனர். இதில் கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா ரவிதங்கம் தலைமையில் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, பர்கூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணி பணியில் இடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளன.
ஊத்தங்கரை அடுத்த சின்னகுன்னத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஜோதி & தர்மன் ஆகியோருக்கிடையே நீண்ட காலமாக வரப்பு பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், ஜோதியின் 17 வயது மகனை தர்மன் கத்தியால் குத்தியுள்ளார். வரப்பில் உள்ள கற்றாழை செடிகளை வெட்டிக் கொண்டிருந்த தர்மனிடம் ஜோதியின் மகன் என்ன செய்கிறாய்? என்று கேட்டதற்கு ஆத்திரமடைந்த அவர் இவ்வாறு செய்துள்ளார். இத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பிப்.22ஆம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
கிருஷ்ணகிரியில் உள்ள பாலக்கோடு வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கொளசனஹள்ளி, புலிகரை, கனவனல்லி, மல்லபுரம், பஞ்சப்பள்ளி, சோமனஹள்ளி, மல்லுப்பட்டி, மஹேந்திரமங்கலம், சூளகிரி மதராசனப்பள்ளி, பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, ராயக்கோட்டை டவுன், ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், தேவனாம்பட்டி, கோபனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், நாகமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (பிப்.18) காலை 9 மணிக்கு மின்தடை ஏற்படும். SHARE IT
இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் கிருஷ்ணகிரியில் பெண்களுக்கான 30 நாட்கள் இலவச அழகு கலை பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் நாளை(பிப்.18)ஆம் தேதிக்குள் இந்தியன் வங்கி அலுவகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரியில் 2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 26 மாதங்களில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் 221 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. ஓசூரை சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை, பர்கூர் பள்ளியில், 13 வயது மாணவியை, கூட்டு பலாத்காரம் செய்த ஆசிரியர்கள் என பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கடந்த ஆண்டு மட்டும் 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரனிடம் மின் இணைப்பு வழங்க, ரூ.35,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக, ரூ.5,000 ஐ வழங்கிய ராஜேந்திரன், மீதமுள்ள பணத்தை வழங்காமல் அவர், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அளித்த அறிவுரையின்படி ரசாயனம் தடவிய, ரூ.30,000 ஐ உதவி பொறியாளர் சிவகுரு, வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோரிடம் வழங்கினார். அப்போது, மறைவில் இருந்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.