India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூருக்கு 13.1.2025 இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஒசூா் சானமாவு வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அடிக்கடி ஒசூர், தருமபுரி மாநில நெடுஞ்சாலையும் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையும் கடந்து செல்வது வழக்கம். 2 சாலைகளும் சானமாவு வனப்பகுதியிலிருந்து அமைந்துள்ளன. எனவே மாநில நெடுஞ்சாலை,தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் ஒலி எழுப்பி நிதானமாக செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒசூரில் நீதிமன்றத்துக்கு கை துப்பாக்கிகள் வைத்திருந்த பாதுகாவலர்கள், கொலை குற்றவாளிகள் என 10 பேர் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில் ஒசூர் நீதிமன்றத்துக்கு குற்றவாளிகள் வருவதற்கு முன்பாக அங்குள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவித்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததையடுத்து ஒசூர் அருகே உள்ள இனப்பசத்திரம் கிராமத்தை சேர்ந்த சம்பத்குமார் (35) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளவயது திருமணம் மற்றும் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்கள் மற்றும் 333 ஊராட்சிளில் செயல்பட்டு வரும் கிராம, வட்டார அளவிலான குழுக்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மேலும் போக்சோ சட்டம் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜன.21ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் ஒகேனக்கல் குடிநீர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், ஓசூர் மாநகராட்சி மற்றும் கிருஷ்ணகிரி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாது எனக் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜனவரி 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள் ஆகியவற்றை மூட வேண்டும் அன்றைய நாட்களில் விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்தாலோ, கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
ஓசூரில் உள்ள தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் மாநில சங்கம் அலுவலகத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் தொழிலாளர்களுக்கு 2025 ஆண்டுக்கான காலண்டர் மற்றும் கரும்பு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அணியும், சென்னை அணியும் மூன்றாமிடத்திற்கு மோதின. இதில், 25-19, 25-16 என்ற நேர் செட்கணக்கில் ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று மூன்றாமிடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே ஜக்கேரி பகுதியில் ஒன்னுகுறுக்கி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசப்பா மனைவி நாகம்மா 59 என்பவர் விளைநிலத்தில் அறுவடை செய்து கொண்டிருந்த பொழுது அப்பகுதிக்கு வந்த ஒற்றை யானை நாகமாவை பயங்கரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக தைத்திருநாளான பொங்கல் – 2025 திருநாளையொட்டி, சமத்துவம் மற்றும் சுகாதார பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று துவக்கி வைத்து, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைகுறள், மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.