India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூர் அருகே பேரண்டபள்ளி இருந்து தொரபள்ளி செல்லும் சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்ற பைரமங்களத்தை சேர்ந்த வெங்கடேஷ் 26 என்பவர், தொரபள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கரண்ட் கம்பத்தின் மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தலைகவசம் அணியவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகளே தலைகவசம் அணிந்து செல்லுங்கள் (தலை கவசம் உயிர் கவசம்)
கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் உள்ளது ஐராவத ஈசுவரர் கோயில். முன்,பின் என இரட்டை கருவறைகள் கொண்ட இந்த கோயிலின் பின்புறம் உள்ள கருவறையில் உள்ள லிங்கத்தில் யானையின் முகம் உள்ளது.ஹஸ்தி என்ற யானை வந்து வழிபட்டதால் லிங்கம் யானை முகம் பெற்றது. அதனால் இந்த ஊர் முதலில் ஹஸ்திமுகம் என பெயர் பெற்று இன்று அத்திமுகம் என மாறியுள்ளது. தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க..
கிருஷ்ணகிரியில் உள்ள டெல்டா சிஎன்சி அப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 18-25 வயதுக்குட்பட்டவர்கள் டிப்ளமா கல்வி தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். இப்பணிக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த <
கிருஷ்ணகிரி – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3:30am சரக்கு வாகனம் (HR38AB2055) தமிழ்நாட்டிற்கு சரக்கு ஏற்றி வந்த நிலையில் சப்பாணிப்பட்டியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள ஹோட்டலில் புகுந்தது. இதில் வாகனம் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் கிளீனர் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகே இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் அப்சரா திரையரங்கத்தினருகே மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கலை மற்றும் தொல்லியல், மானிடவியல், மண்ணியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளைச் சேர்ந்த பொருட்கள் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கிருஷ்ணகிரியிலிருந்து சேகரிக்கப்பட்ட பல வரலாற்று சின்னங்களை காணலாம். இங்கு கிருஷ்ணகிரியை பற்றி நீங்கள் அறியாத வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் உள்ள நீச்சல் குளத்தில் ஏப். 1 ஆம் தேதி தொடங்கிய நீச்சல் பயிற்சியை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால் தொடங்கிவைத்தாா்.12 நாள்கள் நடைபெறும் முதல்கட்ட முகாமில், சிறுவா், சிறுமிகள், பொதுமக்கள் என 18 போ் பயிற்சி பெறுகின்றனர். இந்த நிலையில் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி ஏப்.15 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
ஓசூர், தேன்கனிக்கோட்டை அடுத்த பிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் வீரப்பா, 38, டைலர். இவர் நேற்று முன்தினம் மதியம் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்றுள்ளார். மரக்கட்டா முனியப்பன் கோவில் அருகே, தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த சுசுகி சென் கார் மோதி பலியானார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தம்பதியரில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். https://ambedkarfoundation .nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்
Sorry, no posts matched your criteria.