India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்ற சரக்கு ரயில் ஒசூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.புதியதாக போடப்பட்ட ரயில் பாதையில் சென்றபோது திடீரென 18 எண் கொண்ட பெட்ரோல் டேங்கர் தடம் புரண்டது. இந்த சரக்கு ரயில் 52 டேங்கர்களுடன் வந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் மற்ற டேங்கர்களை பத்திரமாக பிரித்து பெங்களூரு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்பட்ட பகுதியில்,சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களின் மாலை நேர ஆர்ப்பாட்டம் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில், மே மாதம் உள்ளூர் பணி மாறுதல் வழங்குதல் வேண்டும் மற்றும் 1993 ஆம் ஆண்டு சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் நிலை இரண்டு உயர்வை உடனடியாக வழங்கிடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது.
பர்கூர் அருகே காரகுப்பம் தனியார் மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக, 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், பர்கூர் எம்.எல்.ஏ. தே.மதியழகன் ஆகியோர், கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசைப் பொருட்களை வழங்கினர்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <
கிருஷ்ணகிரியை சேர்ந்த சாந்தி-பூங்காவனம் தம்பதிக்கு இடையே 3 நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்ட சாந்தி, தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரை அழைத்து வர அங்கு குடிபோதையில் சென்ற பூங்காவனம், வீட்டில் இருந்த மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விறகு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் பூங்காவனத்தை போலீசார் கைது செய்தனர்.
பெரியதக்கேப்பள்ளியைச் சேர்ந்த கார்த்திக், கடந்த மார்ச் 1ஆம் தேதி, தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். இரவு மனைவியிடம் பேசிய அவர் அடுத்த நாள் காலை வரை தொடர்புகொள்ள முடியவில்லை. சந்தேகம் அடைந்த மனைவி நேரில் சென்று பார்த்தபோது, அவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 08, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9.00 – மதியம் 3.00 மணி வரை நடைபெறுகிறது. வேலை தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாம். ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மீனாட்சி என்பவர் மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை எடுத்துள்ளார். இதையடுத்து, 6 வயது மகனின் முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், தாயே தனது மகனை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மீனாட்சிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் வீட்டில் தனியாக இருந்த அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த 5 சிறுவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். ஓசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், 5 சிறுவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, பின்னர் சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரியில் மீண்டும் ஒரு பாலியல் தொல்லை விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் வீட்டில் தனியாக இருந்த மாணவிகளை குறிவைத்து, 5 மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், 5 மாணவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுதர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.