Krishnagiri

News March 7, 2025

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் வேலை

image

IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலையற்ற நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: மேலும் 2 பேர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த விவகாரத்தில், சிறுமியின் தாயார் உள்பட 3 பேர் கைதான நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அஞ்செட்டியை சேர்ந்த 14 வயது சிறுமியை இளைஞர் கட்டாய திருமணம் செய்துள்ளார். வீட்டுக்கு வர மறுத்த சிறுமியை நேற்று குண்டுகட்டாக தூக்கி சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

News March 7, 2025

கிருஷ்ணகிரி கலெக்டருக்கு உத்தரவு

image

நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனுவை 8 வாரங்களில் பரிசீலிக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சென்னப்ப நாயக்கனூரில் தனது நிலத்தில் தவெக கட்சி கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரி சேட்டு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

News March 6, 2025

ஓசூர் அருகே போலி மருத்துவர் கைது; கிளினிக்குக்கு சீல்

image

ஓசூர் அருகே கதிரேப்பள்ளியில் விஸ்வநாதன் (51) என்பவர் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் லட்சுமிஸ்ரீ, ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ்காந்தி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

News March 6, 2025

ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விண்ணபிக்கலாம்

image

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News March 6, 2025

சிறுமிக்கு கட்டாய திருமணம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அஞ்செட்டியை சேர்ந்த 14 வயது சிறுமியை இளைஞர் கட்டாய திருமணம் செய்துள்ளார். வீட்டுக்கு வர மறுத்த சிறுமியை குண்டுகட்டாக தூக்கி சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் கணவர், தாயார் உள்ளிட்ட மூவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 6, 2025

குட்டையில்  மூழ்கிய ஆசிரியர், மாணவர்: முதல்வர் இரங்கல்

image

ஓசூர் அருகே எழுவப்பள்ளியில் உள்ள தொடக்கப் பள்ளியில் படித்து வரும் 3ஆம் வகுப்பு மாணவன் நித்தின் அருகில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரை காப்பாற்றச் சென்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் கெளரி சங்கரும் குட்டையில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர், குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.

News March 5, 2025

நீரில் மூழ்கி மாணவன் தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

image

ஓசூர் அருகே பாகலூர் பக்கம் உள்ள எழுவப்பள்ளி கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் நிதின் (08) மதிய உணவு இடைவேளையில் பள்ளியின் பின்புறத்தில் விவசாய நீர் சேமிப்பு தொட்டிக்குள் விழுந்துள்ளான். அவனை பள்ளி தலைமை ஆசிரியர் கௌரிசங்கர் ராஜா காப்பாற்ற சென்றபோது அவரும் மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 5, 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News March 5, 2025

ராயக்கோட்டை அருகே கார் விபத்தில் இருவர் பலி

image

ராயக்கோட்டை இருந்து தருமபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் பலத்தகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில், பசுவராஜி என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். மற்ற 3 பேர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் அனுப்பிவைக்கப்பட்ட்டன.

error: Content is protected !!