Krishnagiri

News September 27, 2025

கிருஷ்ணகிரி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு…

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க!

News September 27, 2025

கிருஷ்ணகிரி: ஆதார் கார்டு குறித்து முக்கிய அப்டேட்!

image

கிருஷ்ணகிரி மக்களே! வருகிற அக்.1ம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்க!

News September 27, 2025

கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி! உஷார்!

image

கிருஷ்ணகிரி மக்களே! தன்னை போலீஸ், CBI, வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி, ஃபோன் செய்து, மிரட்டி செய்து பணம் பறிக்கும் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு “டிஜிட்டல் அரெஸ்ட்” என்று பெயர். இதுபோல உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்தால், பதட்டப்படாமல் இந்த <>லிங்கிலோ <<>>அல்லது 1930 என்ற எண்ணில் புகார் செய்யலாம். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் ஷேர் செய்து கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வையுங்கள்!

News September 27, 2025

கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கப்படுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 27, 2025

கிருஷ்ணகிரி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

கிருஷ்ணகிரி, மத்திய அரசு நிறுவனமான NHPC-ல் காலியாக உள்ள 248 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி ராஜ்பாஷா அதிகாரி, ஜூனியர் பொறியாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன. BE, டிப்ளமோ, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.40,000-ரூ.1,05,000 வரை. விருப்பமுள்ளவர்கள் அக்-1ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 27, 2025

ஓசூரை உலுக்கிய சூதாட்ட வழக்கு.. போலீசார் அறிவுறுத்தல்!

image

ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் நேற்று நள்ளிரவில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது ரூ 8,58,000 பணத்துடன் அவர்கள் சிக்கினர். இந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட டிஎஸ்பிகள் இணைந்து குறிவைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதுபோன்ற சூதாட்டம் நடந்தால் பொதுமக்கள் பயப்படாமல் காவல்துறையிடம் தகவல் அளிக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகள் நேற்று (செப்-26) அறிவுறுத்தினர்.

News September 27, 2025

ஓசூர்: பூங்காவில் சர்ச்சைக்குரிய பேனர் அகற்றம்!

image

ஓசூரில் ராமநாயக்கன் ஏரிக்கரையிலுள்ள குழந்தைகள் பூங்காவில் “திருமணம் ஆகாதவர்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு பொதுமக்களும் சமூக ஊடகங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் சர்ச்சை பரவிய நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நேற்று (செப்.26) அந்த பேனரை அகற்றினர். இதனால் ஏற்பட்ட சர்ச்சைக்கு முடிவு ஏற்பட்டது.

News September 27, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20,802 மாணவா்கள் பயன்!

image

சென்னையில் நடைபெற்ற கல்வி எழுச்சி விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் & தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி 2026 கல்வியாண்டுக்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தொடங்கினர். இந்நிகழ்ச்சி கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் ஆட்சியர் கிருஷ்ணகிரியல் புதுமைபபெண் திட்டத்தில் 10758 மாணவிகள், தமிழ்புதல்வன் திட்டத்தில் 10044 மாணவர்கள் பயன் பெறுவதாக குறிப்பிட்டார்.

News September 26, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செ.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 26, 2025

தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி தொடக்கம்

image

கிருஷ்ணகிரி நகராட்சியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முதற்கட்டமாக 1வது வார்டில் கோட்டை பகுதியில் இன்று நகர மன்ற தலைவர் தலைமையில் தொடங்கியது. இதில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றை பிடித்து கருத்தடை செய்யப்பட்டன. இப்பணியில் கால்நடை
துறையினர், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

error: Content is protected !!