Krishnagiri

News March 26, 2025

இந்திய ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

image

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ, BE, B.tech, முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும்.

News March 26, 2025

பர்கூர்:சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி,தேங்காய், கிரானைட் கற்கள் கொண்ட நகரமாகவும் ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும் வருவாய் ஈட்டி வரும்தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து வரும் பர்கூர் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவதால் சிறப்புநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக நகராட்சித்துறை அமைச்சா் அமைச்சர் நேற்று முன்தினம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

News March 26, 2025

கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

image

ஓசூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த கொலை வழக்கில் உனிசெட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை அவரது மனைவி ரூபா மற்றும் கள்ளக்காதலன் தங்கமணி ஆகியோர் கொலை செய்த வழக்கில் இருவருக்கும் நீதிபதி சந்தோஷ் ஆயுள் தண்டனையும் தலா நான்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து இருவரையும் தேன்கனிக்கோட்டை போலீசார் கோவை மற்றும் சேலம் சிறையில் அடைத்தனர்.

News March 25, 2025

குழந்தை வரம் அருளும் சந்திரசூடேஸ்வரர்

image

ஓசூர் நகரின் மைய பகுதியில் தேர்பேட்டை எனும் இடத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்களுக்கு மனநிம்மதி மற்றும் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 25, 2025

கிருஷ்ணகிரி மக்களே கண்டிப்பா இத பண்ணிடுங்க!

image

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் குடும்பஅட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 25, 2025

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

image

ஊத்தங்கரை, மூன்றம்பட்டியில், பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் 5 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடிக்கம்பம் மின்சார வயரில் உரசியதால் ஐந்து பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்த்திலேயே திமுக கிளைச் செயலாளர் ராமமூர்த்தி உயிரிழந்தார். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

News March 24, 2025

ரூ.1,87,000 வரை சம்பளம்; சேலம் TIDEL Park வேலை!

image

சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 24, 2025

கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த லிங்க்கை <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யவும்.

News March 23, 2025

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓட்டுநர் கைது

image

ஓசூர் என் பி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் யோகேஷை (43). தனது வீட்டிற்கு விளையாட வந்த மூன்று வயது பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஓட்டுநர் யோகேஷை கைது செய்தனர்.

News March 23, 2025

தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

image

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!