India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் இன்று( ஏப். 26) காலை 9 மணி முதல் பிரதேகமாக பெண்களுக்கு மட்டும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பங்கேற்று 3000+ காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மாத சம்பளம் ரூ.12,000- ரூ.16,000 வழங்கப்படும். இந்த முகாம் பிற்பகல் 1 மணிவரை நடைபெறுகிறது. மிஸ் பண்ணிராதீங்க. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரி சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம், கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.25) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மத்தூர் அருகே உள்ள சோனரல்லி – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் நிச்சயதார்த்தத்திற்காக சென்று கொண்டிருந்த டிராவல்ஸ் கட்டுப்பாட்டை இழந்து பிக்கப் லாரியில் மோதியது. இந்த விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அனைவரும் மத்தூர் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மலைகள் சூழ்ந்த அழகான ஒரு பகுதியாகும். 2004ஆம் ஆண்டு முதல் இது தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. இந்கு நிலவும் ரம்மியமான வானிலை மனதுக்கு இதம் அளிக்க கூடியதாக உள்ளது. இயற்கை வளங்கள் சூழ்ந்த இந்த மாவட்டத்தில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் ஆணிவேர் விவசாயம். மனதை கொள்ளை அடிக்கும் கிருஷ்ணகிரியின் அழகிய காட்சிகளை ரசித்து மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி அணை அருகே செயல்படும் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சணல் பை மற்றும் பொருள்கள் தயாரிக்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.பயிற்சி காலை 9.30 முதல் மாலை 5.30மணி வரை நடக்கும். முடிவில் பயிற்சி மற்றும் தோ்ச்சி தோ்ச்சி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு94422 47921, 90806 76557 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். *அருமையான வாய்ப்பு நண்பர்களுக்கும் பகிரவும்* இயக்குநா்
கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக் கல்லூரி-04343-292730, மகளிர் கலை கல்லூரி- 04343-225934, அரசு பாலிடெக்னிக்-4343-233867, ஒசூர் அரசு கலைக்கல்லூரி-04344-220345, ஒரப்பாக்கம் ஐ.ஆர்.டி பாலிடெக்னிக்-94435 99279, ஊத்தங்கரை பாலிடெக்னிக்- 4341-291959, பர்கூர் பொறியியல் கல்லூரி-04343-266067, கோழி வளர்ப்பு&மேலாண்மை கல்லூரி- 4344-689005, அன்னை சத்தியா கல்லூரி-04343-236641. *அட்மிசனுக்காக 12th மாணவர்களுக்கு பகிரவும்*
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 732 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்காக ஏப்.25 தேதி வரை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நேரடியாகவோ தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி விண்ணப்பிக்கும் தேதி ஏப்.30ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். *இந்நற்செய்தியை அனைவருக்கும் பகிரவும்*
கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை அருகே புதூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடப்பா, மனைவி பாப்பம்மா(44). இவர் வனப்பகுதியில் ஆடு மேய்த்து வருகின்றார். இந்நிலையில், நேற்று காலை சொரகுறுக்கை வனப்பகுதியில் சேலையால் கழுத்து இறுக்கபட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் கங்காதரன் அளித்த புகாரில் ராயக்கோட்டை போலீசார் கொலையா? வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.
பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04347-235847, ஓசூர் – 04344-261100, கிருஷ்ணகிரி – 04347-235045, பர்கூர் – 04344-256038, ஊத்தங்கரை – 9445086369. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
Sorry, no posts matched your criteria.