India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது புன்னகரம் கிராமம். இந்த ஊர் வழியாக டிப்பர் லாரிகளில் கற்களை ஏற்றி செல்கின்றனர். இந்நிலையில், இன்று கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று நிலைத்தடுமாறி ஸ்ரீ ராமப்பா என்பவரின் வீட்டின் மீது மோதியதில் வீடு தரை மட்டமாகியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து பேரிகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்க வெடி வைத்ததில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், தங்களுக்கு புது வீடு கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும், மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ள 2 வெடி மருந்துகளை அப்புறப்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர். 3 வீடுகள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொளாகி உள்ளது.
ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாளிப்பட்டி, பெரிய தள்ளாடி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பேனா, அளவுகோல், பென்சில், பாகைமானி போன்ற தேர்வு உபகரணங்களை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வழங்கி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வாழ்த்தினார்.
சூளகிரி அடுத்துள்ள கொட்டாவூரை சேர்ந்தவர் சின்னராஜ் (59) விவசாயியான இவர் கடந்த 27ஆம் தேதி அன்று டூவீலரில் அங்கொண்டப்பள்ளியில் சென்றபோது அந்த வழியாக மற்றொரு டூவீலர் சின்னராஜ் ஓட்டி சென்ற டூவீலரில் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சின்னராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரியில், பெங்களூரு ரோடு அருகே அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று (மார்ச் 29) காலை 7 மணி அளவில் சிலுவைப்பாதை நடைபெற்றது. பின் மாலை 6:30 மணி அளவில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் ஆலயத்திற்கு வருகைபுரிந்து ஆராதனையில் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஒசூரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் அனுமதியின்றி அவா் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படைப்பிரிவு அதிகாரி விஜயா சாமுண்டீஸ்வரி ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் உள்பட 400 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திராவிட தெலுங்கு தேசம் கட்சியும் பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சியும் இணைந்து தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இக்கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரியில் போட்டியிடும் கனி ஆறுமுகம் நேற்று வேட்பு மனு பரிசீலனைக்காக ஆட்சியரகத்திற்கு வருகை தந்து திரும்பி சென்றார். அப்போது அவரை வழி மறித்த நாம்தமிழர் கட்சியினர், எங்கள் சின்னத்தை பறித்து விட்டீர்கள் என கூறி தாக்கியுள்ளனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார். முன் அனுமதியின்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறகளை மீறியதாக தேர்தல் பறக்கும் படையினர் எல்.முருகன் மீது அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை என மக்கள் கூறுவதைக்காண முடிகிறது. ராயக்கோட்டையில் அண்ணா சிலையை மூடியுள்ளதை தவிர வேறுவிதமான தேர்தல் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.சாதாரணமாக கிளைச்செயலாளர்கள் கூட அதைப்பற்றி பேசுவதைக்காணமுடியவில்லை. பிரச்சாரத்திற்கு 4 ஆம் கட்ட பேச்சாளர்கள் கூட வராதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சி அடிவிசாமிபுரத்தை சேர்ந்த மலை மீது மதனகிரி முனீஸ்வரா சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இதில் கணபதி பூஜை, வாஸ்து ஹோமம் கலசஸ்தாபனம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தபட்டு நேற்று பல இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.