Krishnagiri

News April 1, 2024

கிருஷ்ணகிரி: நீச்சல் பயிற்சி முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி முகாம் இன்று ( ஏப்ரல் 1) தொடங்கியது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவின் கீழ், நீச்சல் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி முகாம் இன்று முதல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு ரூ. 1,770 கட்டணம் ஆகும். மேலும் விவரங்களுக்கு 74017 03487 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

News April 1, 2024

கிருஷ்ணகிரி: 100 பவுன் நகை, ரூ.1.2 கோடி பணம் பறிமுதல்

image

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின்போது காரில் 10 லட்சம் ரூபாய் சிக்கிய நிலையை வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பெயரில் ஓசூரில் பிரஷர் லோகேஷ் குமார் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு லோகேஷ் குமார் வீட்டில் இருந்து 100 பவுன் தங்க நகை மற்றும் 1.2 கோடி பணம் பறிமுதல் செய்து அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

தண்ணீரை விலைக்கு வாங்கி செடிகளுக்கு ஊற்றும் விவசாயிகள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களாக அந்த பகுதிகளில் மழை பொய்த்ததால், தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மா மரங்கள் காய்ந்து வருவதால் மா செடிகளை காக்க ஜெகநாதபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி, டிராக்டர் மூலம் கொண்டு வந்து மா செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி வருகின்றனா்.

News April 1, 2024

கிருஷ்ணகிரி: திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 31) மாலை அலேசீபம் பகுதியில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு கழக நிர்வாகிகளிடையே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 31, 2024

டூவீலர் மீது அரசு பஸ் மோதி விவசாயி உயிரிழப்பு

image

தர்மபுரி மாவட்டம் அதகப்பாடி அடுத்த ஏ.செக்காரப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (34), விவசாயி. இவர் நேற்று முன் தினம் இரவு டூவீலரில் கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News March 31, 2024

தேர்தல் விதி மீறியதாக இருவர் மீது வழக்கு

image

கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளகுட்டை பகுதியில் அனுமதி இன்றி பெட்டிக்கடை சுவற்றில் இரட்டை இலை சின்னம் வரைந்ததாக திருமூர்த்தி என்பவரும், குருகப்பட்டி பகுதியில் அனுமதியின்றி கைச்சின்னம் வரைந்ததாக தமிழ்வாணன் என்பவர் மீதும் தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 31, 2024

கிருஷ்ணகிரி: ஆபத்தை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாகன ஓட்டிகள் பிரிவு சாலை இல்லாத பகுதிகளில் நேரடியாக சர்வீஸ் சாலைக்கு வாகனங்களை இறக்கி வருகின்றனர். இதனால் பிரிவு சாலையில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து விபத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News March 30, 2024

கிருஷ்ணகிரி: முதல்வரை சந்தித்த செயலாளர்

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் நேற்று தருமபுரி மாவட்டத்தில் வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபிநாத் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டனர். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 30, 2024

கிருஷ்ணகிரி: லாரி மோதியதில் தரை மட்டமான வீடு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது புன்னகரம் கிராமம். இந்த ஊர் வழியாக டிப்பர் லாரிகளில் கற்களை ஏற்றி செல்கின்றனர். இந்நிலையில், இன்று கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று நிலைத்தடுமாறி ஸ்ரீ ராமப்பா என்பவரின் வீட்டின் மீது மோதியதில் வீடு தரை மட்டமாகியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து பேரிகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 30, 2024

கிருஷ்ணகிரி: வெடி மருந்தால் 3 வீடுகள் சேதம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்க வெடி வைத்ததில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், தங்களுக்கு புது வீடு கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும், மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ள 2 வெடி மருந்துகளை அப்புறப்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர். 3 வீடுகள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொளாகி உள்ளது.

error: Content is protected !!