Krishnagiri

News June 14, 2024

கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி

image

கிருஷ்ணகிரியில் 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஜூலை 5ம் தேதி துவங்குகின்றது.  இதனை காண 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வரும் ஜூலை மாதம் 5ஆம் தேதி நடக்க உள்ளது.

News June 14, 2024

கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் அழைப்பு

image

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 எம்பி தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி கூறும் சீர்மிகு விழா, முதல்வருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நாளை (ஜூன் 15) கோவையில் நடைபெற உள்ளது. இதில் நிா்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

News June 14, 2024

கிருஷ்ணகிரி: அரசின் சாதனை விளக்க கண்காட்சி

image

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், நாரலப்பள்ளி ஊராட்சி, மகராஜகடை கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, இன்னுயிா் காப்போம், இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட பல புகைப்படங்கள் இருந்தன. இதை நேற்று பொதுமக்கள் பார்வையிட்டனர்.

News June 13, 2024

ஓசூர் பகுதியில் மின்வெட்டு அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜூன் 15ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு மற்றும் அத்யாவசிய பணிகள் நடைபெறுவதால் ஓசூர் நகர் பகுதி, காமராஜ் நகர், அசோக் லைலாண்ட், அதியமான் கல்லூரி உள்ளிட்ட 48 பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என கூறியுள்ளார்.

News June 13, 2024

கிருஷ்ணகிரியில் விபத்தில் ஒருவர் மரணம்

image

கிருஷ்ணகிரியில் டோல்கேட் அருகே நேற்று(ஜூன் 12) இரவு 11 மணி அளவில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அடையாளம் தெரியாத இவரைப் பற்றி தெரிந்தால் உதவி காவல் ஆய்வாளர் அவர்களை தொடர்பு கொள்ளவும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்பு எண் 9498178880.

News June 13, 2024

ஓசூரில் பரபரப்பு: 25 பேருக்கு வாந்தி, மயக்கம்

image

ஓசூர் அருகே சின்ன எலசகிரியில் இன்று (ஜூன் 13) மாநகராட்சி குடிநீரை அருந்திய 25 நபர்கள் வாந்தி மயக்கம், வயிற்று வலி வந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு சிலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஓசூர் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News June 13, 2024

போச்சம்பள்ளி அருகே கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

image

போச்சம்பள்ளி வட்டம் பர்கூர் ஒன்றியம் காட்டாகரம் ஊராட்சி 1ஆவது வார்டுக்கு உட்பட்ட வெள்ளைபாறையூர், ஐயர் கொட்டாய் அண்ணாநகர் சாமியார் கொட்டாய் (செம்மலை), செவத்தான் கொட்டாய், ஜல்லி கவுண்டர் கொட்டாய் ஆகிய பகுதியில் கால்நடைத்துறை சார்பாக சுமார் 50க்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு இன்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. உடன் 1ஆவது வார்டு உறுப்பினர் முகாமிற்கு முன்னேற்பாடு செய்து கொடுத்தனர்.

News June 13, 2024

அமைச்சருக்கு நேரில் சென்று அழைப்பு

image

கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவர் ஆலயத்தில் அடுத்த மாதம் 12ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சேகர் மற்றும் செயல் அலுவலர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை நேரில் சந்தித்து விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.

News June 13, 2024

உணவு பாதுகாப்பு துறை அதிரடி: 40 கடைகளுக்கு சீல்

image

ஒசூரில், உணவு பாதுகாப்புத் துறை, போலீசார் இணைந்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப்பாக்குகள் விற்கப்படுகிறதா என ஆய்வு நடத்தினா். உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேனா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு ஆகியோா் உத்தரவின்படி ஓசூா் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையில் ஓசூா் பகுதியில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்ற 40 கடைகளுக்கு சீல் நேற்று வைக்கப்பட்டது.

News June 13, 2024

கிருஷ்ணகிரி: மாபெரும் தர்ணா போராட்டத்திற்கு அழைப்பு

image

காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் முதலுதவி சிகிச்சைப் பிரிவை நிறுத்தியதை தொடர்ந்து மீண்டும் அதனைச் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று (ஜூன் 13) காலை காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனை முன்பு மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. அதுசமயம் சங்கத்தினர் அனைவரும் கலந்துகொள்ளுமாறு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!