India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், இணை இயக்குநர் பச்சையப்பன் மற்றும் விவசாய பெருமக்கள் உள்ளனர்.
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், எம். வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியான ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலை கலெக்டர் சரயு இன்று வழங்கினார். அப்போது பருகூர் எம்எல்ஏ உடனிருந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த ஆகாஷ் ஹரி ( 16 வயது) 2018 ல் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமுற்று அசைவற்ற நிலையில் வசித்து வருகிறார். அச்சிறுவனும் அவரின் தாயும் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தனர். சிகிச்சைக்கு உதவிட சிறுவனின் தாய் கோரினார். எனவே உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது பெய்த லேசான மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கே.ஆர்.பி.அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது. இன்று நீர்மட்டம், 51அடியை எட்ட உள்ளது. அதன்பிறகு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மாநில, மாவட்ட நிா்வாகிகள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள், கட்சியின் மூத்த நிா்வாகிகள்,பொறுப்பாளா்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் தமிழக அரசு மின் கட்டண உயர்வு செய்ததை கண்டித்தும், நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர், பதாகைகளை கையில் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பெரியமலைக்கோட்டை என்பது ஒருங்கிணைந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 12 முக்கிய கோட்டைகளில் ஒன்றாகும். இம்மலைக்கோட்டையில் உள்ள பெருமாளை மக்கள் புரட்டாசி மாதம் விரதம் இருந்து வழிபடுவர். மேலும் விரத நாட்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலை முடியை காணிக்கையாக அளித்தும், உண்டியல் காணிக்கை இட்டும் பெருமாளை வழிபடுவர்.
1947 முதல் 80 ஆண்டுகளாக கிருஷ்ணகிரிக்கு ரயில் பாதை வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் பெரும்பான்மையான ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இப்படி இருந்தும் சென்னை, சேலம், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் கிருஷ்ணகிரிக்கு எப்போது ரயில்பாதை வரும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
சூளகிரி வட்டம் இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, கும்மனுார் அருகே இன்று காலை ஒற்றை யானை தாக்கி காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் வனக்காவலர் நரசிம்மனை, கலெக்டர் சரயு இன்று நேரில் பார்வையிட்டு அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது அரசுமருத்துவ கல்லுாரி முதல்வர் மரு.பூவதி உள்ளிட்ட பலர் உடை இருந்தனர்.
கிருஷ்ணகிரியில் கடந்த 80 ஆண்டுகளாக ரயில் பயணமே இல்லை. 1998, 2012-ல் மத்திய அரசின் பட்ஜெட்டில், கிருஷ்ணகிரிக்கு ரயில் பாதை வரும் என அறிவிப்பு வந்தது. 2022ஆம் ஆண்டு ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டைக்கு ரயில் பாதைக்கான திட்ட அறிக்க தயார் செய்ய ரூ.2.45 கோடியை மத்திய அரசு ஒதுக்கியும் பலனில்லை. இந்த நிதியாண்டிலும் ரயில் பற்றிய தகவல் இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.