India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா–வின் 116வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாராக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை கலந்து கொண்டார். அவர் பேசுகையில் திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்அமைச்சராக்க பாடுபடுவோம்’ என்றார். இதில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு பேசினார்.
கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாமில் 23 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தின் வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த போது,23 மாணவிகளில் 2 பேருக்கு 5லட்சமும், மீதமுள்ள 21 மாணவிகளுக்கு 1 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேப்பள்ளி பஞ்சாயத்து எலத்தகிரியைச் சேர்ந்த சார்லஸ்(41) என்ற இளைஞர் நேற்று இரவு 9 மணிக்கு ஒரப்பம் சாலையை கடக்கும் போது ஓசூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அங்கு இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவரது உடல் போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஓசூரைச் சேர்ந்த 29 வயதான முருகேஷ் என்ற ஐடி ஊழியர் தான் பணிபுரிந்த பெங்களூர் நிறுவனத்திலிருந்து 57 லேப்டாப்களை திருடியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முருகேஷ் தனது விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு நஷ்டம் அடைந்ததால் அந்த கடனை அடைப்பதற்காக திருடியதாக கூறியுள்ளார். லேப்டாப் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டரில் இருந்து ₹22 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட 50 லேப்டாப்களை போலீசார் மீட்டனர்.
போச்சம்பள்ளி துணை மின் நிலையம் மற்றும் மத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மேற்படி மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான போச்சம்பள்ளி, பாரூர், அரசம்பட்டி, புலியூர், பண்ணந்தூர், மத்தூர், மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் என் விநியோகம் இருக்காது என்று செயற்பொரியாளர் எம். இந்திரா தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்ட மின்வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் வேலூரில் நாளை நடைபெற உள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் செல்வகுமாா் நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில் கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மின் வாரிய அலுவலா்கள், பணியாளர்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற செப் 20-ஆம் தேதி அன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், பேரூர்களிலும் ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் அவர்கள் சார்ந்த பகுதிகளில் நாளை காலை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தவும். அதன்பின் சென்னையில் நடக்கும் திமுக பவள விழாவில் கலந்து கொள்ளவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் கல்லூரி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகளை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் அவர்கள் இன்று துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கபடி, கைப்பந்து, தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, வாலிபால், சிலம்பம், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. இதில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நகரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பொதுமக்கள், ஹிந்து அமைப்புகள் சாா்பில் 100க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து நேற்று 84 விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டதையடுத்து அசம்பாவிதத்தை தடுக்க டிஐஜி உமா தலைமையில் நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகியை சேர்ந்த 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.