India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் ,ஓசூர் வனக்கோட்டம் 1,492 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவை விளை நிலங்களில் அவ்வப்போது புகுந்து அவற்றை சேதப்படுத்துவதுடன் உயிர் பலியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 17 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தி, பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ககனகிரி எனும் பெரியமலைக் கோட்டை கிருஷ்ணகிரியிலிருந்து 27 கி.மீ தூரமும், ஓசூரிலிருந்து 67 கி.மீ தொலைவிலும், ஊத்தங்கரையிலிருந்து 45 கி.மீ தொலைவிலும் உள்ளது. மலையேற்றம் செல்ல சிறந்த இடமாகவும் இந்த மலைக்கோட்டை உள்ளது. மலையேற்றம் மற்றும் கோவிலுக்கு செல்ல விரும்புவோர் முதலுதவி வசதியோடு சென்றால் பயணம் பாதுகாப்பாக இருக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரம். ஊத்தங்கரை – 9498167897, பர்கூர் – 9498106530, கிருஷ்ணகிரி – 9498167900, ஓசூர் – 9498169256, தேன்கனிக்கோட்டை – 9498166367. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓசூர் வனச்சரகத்தில் வாகன விபத்தில் 34 வன விலங்குகள் உயிரிழந்துள்ளது. 20 மான், யானை, காட்டுப்பன்றி மற்றும் காட்டெருமை தாலா ஒன்று வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. 20 மான்களின் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் இந்தியன் வங்கி சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள், சிறுகுறித் தொழிலாளர்கள், மகளிர் வங்கி கடன் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்தார். இதில் தொழில் முனைவோர் அனைவருக்கும் வங்கி கடன் கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது, அதனை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறுசேமிப்புத்துறை சார்பாக, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு கேடயங்கள், பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கே.எம்.சரயு இன்று வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) முரளிதரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி.உமா உத்தரவிட்டுள்ளாா். ஒசூா் நகர காவல் ஆய்வாளா் சிவகுமாா் பாகலூருக்கும் , சேலம் கருமலைகூடல் காவல் ஆய்வாளா் முருகன் ஊத்தங்கரைக்கும் , ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் கந்தவேல் சேலம் தலைவாசலுக்கும் , தலைவாசல் காவல் ஆய்வாளா் சாவித்திரி ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், முதியோர் உதவித்தொகை, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 244 மனுக்களை இன்று கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு பெற்றுக்கொண்டார். தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமாலைப்பட்டி பகுதியை சேர்ந்த தனபால் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி ஆகியோர் ஸ்ரீ குமரன் பைனான்ஸ் என்ற பெயரில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சீட்டு நடத்தி மோசடி நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணத்தை இழந்த பொதுமக்கள் இன்று 29-தேதி ஆட்சியரிடம் புகார் மனு வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.