India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழையே பெய்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 6 வட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கிரியாடினின் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 80 மாணவ மாணவியர்கள் பயிலும் இப்பள்ளியில் வகுப்பறைகள் ஆபத்தான நிலையில் இருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது. புதிய வகுப்பறை கேட்டு கோரிக்கை வைத்தும் பயன் இல்லாததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நேரலகிரி வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்தது. இந்த யானை அவ்வப்போது விவசாய நிலங்களை நாசம் செய்து வந்தது. கடந்த வாரம் வனத்துறை மற்றும் மின் ஊழியர்களை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். இந்த யானை பல்வேறு பகுதிகளில் சுற்றி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் ரோந்து காவலர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை – 9498170295, பருகூர் – 8825405987, கிருஷ்ணகிரி – 8248346235, ஓசூர் – 9498185796, தேன்கனிக்கோட்டை – 9443513972. அவசர உதவிக்கு இந்த எண்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 73.7 மி.மீ. மழை பதிவானது. இதேபோல் அஞ்செட்டி 2.4, பாரூர் 3.4, தேன்கனிக்கோட்டை 5.0, ஒசூா் 14.8, நெடுங்கல் 4.8, பெனுகொண்டாபுரம் 7.2, போச்சம்பள்ளி 5.2, சூளகிரி 2.0, ஊத்தங்கரை 30, சின்னார் அணை 4, கெலவரப்பள்ளி அணை 53, கிருஷ்ணகிரி அணை 37, பாம்பாறு அணை 29.மி. மீ மழையும் பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம், பெரியக்கொட்டக்குளம், ஊராட்சியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் முருகேசன் மற்றும் அதிமுக பிரதிநிதி சக்திவேல் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான மதியழகன் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர். அவர்களை மதியழகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகந் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், நகர மன்ற தலைவர் பரிதா நவாப், உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்ட்ரல் தியேட்டரில் இருந்து ஊர்வலமாக சென்று ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 396 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 621 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 50.55 அடியாக இருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தில் திருடு போன ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 50 செல்போன்களை மீட்டனர். இதை எஸ்பி நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், தொலைந்து போன செல்போன் தொடர்பான புகார்களுக்கு www.ceir.gov.in என்ற வலைதளத்தில் புகாரளிக்கலாம்.
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 இலட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தையல் தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் இதற்கான விண்ணப்பங்களை
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.