India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க, தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசாருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட பட்டியல் சாதி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் கடந்த 7ஆம் தேதி மனு அளித்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2024ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் கரூர் அரசு கலைக்கல்லூரியில்நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு (04324-255077) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கி ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டத்திற்கு அடுத்த சில நாள்கள் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலை நிலவுகிறது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், வாங்கல், ஆகிய இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என இன்று வானிலை அறிக்கை மையம் அறிவித்துள்ளது.
கரூர்தானோன்றிமலை வெங்கட்ரமணா சுவாமி கோயில் புரட்டாசி பெரும் திருவிழா இன்று தேரோட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில் இன்று புரட்டாசி 4ஆவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடும், திருத்தேர் பிடித்தலும் நடைபெறுகிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி தேரில் எழுந்தருதல் நிகழ்ச்சி காலை 8:15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நடைபெறும்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, ஆகிய இடங்களில் இன்று லேசான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் 73 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
கரூர், திருமாநிலையூரை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபா என்பவரின் கணவர் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி தனது மனைவியின் தோழி ரம்யாவின் உறவினர்களை பழிதீர்க்க கூலிப்படையை தயார் செய்திருந்தார். அதுகுறித்து தகவலறிந்த தான்தோன்றிமலை போலீசார் ராமசுப்பிரமணி அளித்த தகவலின் அடிப்படையில், கூலிப்படையை சேர்ந்த 6 பேரிடமிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, ஆகிய இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என இன்று வானிலை அறிக்கை மையம் அறிவித்துள்ளது.
கரூரில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த 5 கடைகளுக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். கரூரில் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 5 கடைகளுக்கு நேற்று காலை அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும் அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Sorry, no posts matched your criteria.