Karur

News August 24, 2025

கஞ்சா விற்பனை குறித்து தொடர்பு கொள்ளவும்!

image

கரூர் நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தால் சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரேனும் கஞ்சா போதை பொருட்களை விற்றாலோ, வைத்திருந்தாலோ, கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் துறை ஆய்வாளர் 99429-04717 சார்பு ஆய்வாளர் 94981-61773 ஆகிய எண்களில் புகார் கொள்ளலாம்.

News August 24, 2025

கரூர்:குழந்தைகளுக்கு மாதம் 2000 அறிவித்தார் கலெக்டர்!

image

பெற்றோரை இழந்த குழந்தைகள் பாதுகாத்திடும் வகையில் அவர்களது பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, 18 வயது வரை மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கல்லூரி கல்வி மற்றும் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் பயன் பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவரிடம் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். SHARE பண்ணுங்க

News August 24, 2025

தக்காளி விலை திடீர் உயர்வு

image

கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி, பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால்,கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே தக்காளி வரத்தாகிறது. கடந்த மாதம் கிலோ, 40 ரூபாய் வரை விற்ற ஒரு கிலோ பெரிய ரக தக்காளி தற்போது, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சிறிய அளவிலான தக்காளி, 30 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாக உயர்ந்துள்ளது.

News August 23, 2025

கரூர்: கணவன் அடித்தால்! உடனே CALL

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கரூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9150368751-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News August 23, 2025

கரூர்: இளைஞர்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி

image

கரூர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தாட்கோ நிறுவனத்தின் மூலம், இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 4 பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சி காலத்தில் சீருடை, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News August 23, 2025

கரூரில் இலவச வக்கீல் சேவை வேண்டுமா..?

image

கரூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ▶️கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 23, 2025

கரூரில் கலை கட்டப் போகும் திருவிழா!

image

கரூரில் நாளை(ஆக.24) இயற்கை வேளாண்மை திருவிழா காலை 9:00 – மாலை 6:00 வரை கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், கண்காட்சி, சிறப்புப் பயிற்சி பட்டறை, இயற்கை உணவு செய்முறை பயிற்சி, 100க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் முதலியவை இடம்பெறவுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு இலவச இயற்கை உணவு வழங்கப்படும். இதற்கு நுழைவு கட்டணம் இல்லை, என இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். (SHARE)

News August 23, 2025

கரூரில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்

image

கரூர்: மைலம்பட்டி மேற்கு பகுதியில் மைலம்பட்டி, தரகம்பட்டி, சீதப்பட்டி, அய்யம்பாளையம், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சூரியகாந்தியை சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் அதிக அளவு நடவு செய்கின்றனர். மேலும் தற்போது பெய்துள்ள மழையால் நல்ல விளைச்சலை சூரியகாந்தி கொடுத்துள்ளது என மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் வெளிப்படுத்திக் கொண்டனர்.

News August 23, 2025

கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

கரூர் மாவட்ட கூட்டரங்கில் (25.08.2025) அன்று மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து எரிவாயு நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் தெரிவித்தார்.

News August 22, 2025

கரூர்: ரூ.67,100 சம்பளத்தில் POLICE வேலை! APPLY NOW

image

கரூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

error: Content is protected !!