India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டத்தில் வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கான மாநில விருது பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சொந்த நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவம், தோட்டக்கலைத்துறை இணையதளம் www.tnhorticulture.tn.gov.in மூலம் பதிவிறக்கம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் தகவல் அறிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் கல்லூரி மாணவர்கள், https://www.vidyalaksmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க தங்கள் பகுதிக்குரிய வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்குமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள் இன்று அறிவிப்பு செய்தார்.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC-Gr-2, Gr-2 (முதன்மைத் தேர்வு) போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 08.11.2024 அன்று சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்தார்.
கரூரில் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் பயிற்சி பெற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திருச்சியில் உள்ள அலுவலகத்தில் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 05.12.2024 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், கல்லுமடை, மணவாடி, வெள்ளியணை, வாங்கல் ஆகியபகுதிகளில் இன்று லேசான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வாங்கல் பகுதியை சார்ந்த பாரதிய ஜனதா கட்சி Exஇளைஞரணி தலைவர் கணேசன் தலைமையில் 30 நபர்கள் கோயமுத்தூர் திமுக அலுவலகத்தில் இன்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வுதுறை அமைச்சர் V. செந்தில் பாலாஜி முன்னிலையில் பிஜேபியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர் . அமைச்சருக்கு சால்வை அணிவித்து மலர் கொத்து வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் .
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், கல்லுமடை, மணவாடி, வெள்ளியணை, வாங்கல் ஆகியபகுதிகளில் இன்று லேசான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புகலூர் காகிதபுரத்தில் உள்ள டி.என்.பி.எல் தொழிற்பயிற்சி நிலையம் அறக்கொடை சார்பில் தொடங்கப்பட்டு எலக்ட்ரீசியன், பிட்டர், இண்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் மற்றும் வெல்டர் தொழிற்பிரிவுகளில் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் இண்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் தொழிற்பிரிவில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஸ்ரீதேவியை காகித நிறுவனத்தின் பொதுமேலாளர் கலைச்செல்வன் நேற்று பாராட்டினார்.
இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட இளைஞர்களுக்கு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு வரும் 7ஆம் தேதி தேர்வு முகாம் நடைபெற உள்ளதால் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், வாங்கல் ஆகிய இடங்களில் இன்று லேசான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.