Karur

News August 27, 2025

கரூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் உங்களிடம் ஸ்டாலின் முகாம், நாளை வார்டு எண் 44கக்கு உட்பட்ட தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி கலைக்கூடம், கோம்புபாளையம் சமுதாய கூடம், கடவூர் வரவணை சமுதாய கூடம், சேந்தமங்கலம் (மேற்கு), இனங்கனூர் ஊராட்சிகள் மற்றும் வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

News August 26, 2025

கரூர்: கை ரேகை வேலை செய்யலையா?

image

கரூர் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, கரூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். (SHARE IT)

News August 26, 2025

கரூர்: ரூ.25,500 சம்பளத்தில் அரசு வேலை!

image

கரூர் மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 26, 2025

BREAKING: கரூரில் முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்!

image

கரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய அரவக்குறிச்சி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கலிலூர் ரஹ்மான் வயது முதிர்வால் காலமானார். அவருக்கு வயது 78. 2006-ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கரூர் பள்ளப்பட்டியில் பிறந்த இவர், தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, 45,000க்கும் கூடுதலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 2 முறை தேர்வு நிலை பேரூராட்சியின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.

News August 26, 2025

கரூர்: டிகிரி முடித்தால் ரயில்வே வேலை!

image

கரூர் மக்களே..,ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB Station Controller பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு செப்.15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. கணினி அடிப்படையான தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். <>இந்த<<>> அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்தை தொடர்ந்து கவனிக்கவும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE!

News August 26, 2025

கரூர் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டம்

image

கரூர் மாவட்டத்தில் தற்போது 2025 காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, மஞ்சள், தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற பயிா்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்.
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல். அளித்துள்ளார்

News August 26, 2025

கரூரில் வாகன சோதனையில் 955 வாகனங்கள் வழக்குப்பதிவு

image

கரூர் மாநகரில் குற்ற தடுப்பு நடவடிக்கையாகவும், போக்குவரத்து விபத்துகளை குறைப்பதற்காகவும் வார இறுதி நாட்களில் (22.08.25 முதல் 24.08.25) 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல் மற்றும் கைபேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 955 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

News August 26, 2025

கரூர் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டம்

image

கரூர் மாவட்டத்தில் தற்போது 2025 காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, மஞ்சள், தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற பயிா்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்.
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல். அளித்துள்ளார்

News August 25, 2025

கரூரில் கிராம உதவியாளர் வேலை! நாளை கடைசி

image

கரூர் மாவட்டத்தில் 27 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆக.26 நாளைக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> பண்ணுங்க. அதிகம் ஷேர் செய்து இளைஞர்களுக்கு உதவுங்க!

News August 25, 2025

ரயில்வே ஸ்டேஷன்களில் மூடப்பட்ட கழிப்பறைகள்

image

கரூர் வழியாக திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், சேலம் மார்க்கமாக நாள்தோறும் சிறப்பு ரயில்கள் சென்று வருகின்றன. நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை!

error: Content is protected !!