India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பெரியபாலம் கடைவீதியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண் தூய்மை பணியாளர் ஒருவரை வெறி நாய் காலில் கடித்து விட்டு ஓடி உள்ளது. காயம் அடைந்த தூய்மை பணியாளருக்கு அருகில் இருந்தவர்கள் காலில் ரத்தம் வடிவதை துணியால் கட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென்காசியைச் சேர்ந்தவர் 45 வயதான நபர். இவருக்கு 42 வயதில் மனைவியும், 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கரூரில் 7 வருடமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவரது மனைவி 6 மாத கர்பிணியாக உள்ளார். இவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில், நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் மணமுடைந்த இவர் மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோயில் பெயரில், பட்டா உள்ள காலி இடங்கள், வீட்டுமனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கையகப்படுத்துவதை எதிர்த்து, கோயிலில், பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட நா.த.க செயலாளர் நன்மாறன், முன்னாள் வி.ஏ.ஓ. காமராஜ், பாலு, ஆனந்தன், ரஞ்சித் உள்பட, 500 பேர் மீது, வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் ஹேமலா ஹோட்டலில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 73 சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்துக்கொள்ள, 2030 ஆண்டுக்குள் மொத்த விற்றுமுதல் 50,000 கோடியை தொடும் வகையில் ‘KARUR VISION 2030 COLLABORTING TO ACHIVE THE BEYOND 50K’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
➤மனைவி, மகளை கொலை செய்து தொழிலாளி தற்கொலை ➤பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ➤ரயில் பயணிகள் கவனத்திற்கு ➤தனியார் நிறுவனத்தில் அமைச்சர் ஆய்வு ➤வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் ➤ஒரு நாள் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம், வடிவேல் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில், இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு சிறப்பித்தார் . உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பித்தனர். சிறப்பித்தனர்
கரூர், வெங்கமேடு, விவிஜி நகரை சேர்ந்தவர் செல்வகணேஷ். அவர் இன்று தனது 6 மாத கர்ப்பிணியாக மனைவி கல்பனா மற்றும் 6 வயது மகள் சாரதிபாலாவை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார் மயக்க நிலையில் இருந்த செல்வகணேஷ் மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொறியியல் துறை சார்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக கரூர் வழியாக இயக்கப்படும் திருச்சி பாலக்காடு பயணிகள் ரயில் 9 நாட்களுக்கு சூலூர் சாலை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கரூர் வழியாக திருச்சியில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காடு வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் சூலூர் சாலை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு- கரூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு சிறப்பு பயிற்சி சேர்க்கை முகாம் (9.11.2024) சனிக்கிழமை இன்று தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 3 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சீருடை, பயிற்சி புத்தகங்கள், உணவு, தங்குமிடம், காப்பீடு மற்றும் 3 மாதத்திற்கு வேலை வாய்ப்பின் போது ஊக்கத் தொகை வழங்கப்படும்.
கரூர் மாவட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம், புழுதேரியில் ஒரு நாள் இலவச காளான் வளர்ப்பு குறித்த பயிற்சியானது வரும் (13.11.24) அன்று காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் காளான் வளர்க்கும் தொழில்நுட்பங்கள், பால் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நேரடி களப்பயிற்சி காணலாம்.
Sorry, no posts matched your criteria.