Karur

News September 3, 2025

கரூர்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.

News September 3, 2025

கரூர்: பண்ணை தொடங்க 50% மானியம் பெறுவது எப்படி?

image

▶️நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
▶️இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
▶️இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
▶️அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 3, 2025

கரூர்: முதல் பட்டதாரி சான்றிதழை எப்படி வாங்குவது?

image

▶️தமிழக அரசின் <>TN esevai <<>>போர்டலில் Citizen Login-ஐ தேர்ந்தெடுத்து உள் நுழையவும்.
▶️அதில் Services என்ற ஆப்ஷனை கிழிக் செய்து, Revenue department-ஐ தேர்வு செய்யவும்.
▶️அதில் REV-104 fIRST GRADUATE CERTIFICATE என்பதை தேர்ந்தெடுக்கவும்.
▶️பின்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.
▶️10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

News September 3, 2025

கரூரில் முற்றிலும் இலவசம்!

image

கரூர் மக்களே..,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்சி நாளை(செப்.4) முதல் கரூரிலேயே வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. மொத்தம் இதற்கு1009 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 3, 2025

கரூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

image

கரூர் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், இன்று (செப். 3) நடைபெற உள்ளது. க.பரமத்தி வட்டாரத்தில் கோடந்தூர் மற்றும் தென்னிலை தெற்கு ஊராட்சிகளுக்கான முகாம் தென்னிலை லட்சுமி மகாலில், கடவூர் வட்டாரத்தில் தென்னிலை மற்றும் வாழ்வார்மங்கலம் ஊராட்சிகளுக்கான முகாம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடத்தில், தோகைமலை வட்டாரத்தில் சின்னையம்பாளையம் அகதிகளுக்கான முகாம் நடைபெற இருக்கிறது.

News September 2, 2025

கரூர்: தேர்வே இல்லாமல் அரசு வேலை?

image

கரூர் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் (19.09.2025) தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News September 2, 2025

கரூர்: தமிழில் எழுத படிக்க தெரிந்தால்! அரசு வேலை

image

கரூர் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 2, 2025

கரூர்: மகன் இறந்த விரக்தியில் தாயும் தற்கொலை!

image

கரூர்: எம்ஜிஆர் நகர் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் இரண்டு வருடங்களுக்கு முன்னால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக மனவிரக்தியில் இருந்த ஜெயலட்சுமி நேற்று(செப்.1) தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 2, 2025

கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர்: வெண்ணைமலைப் பகுதியில் அமைந்துள்ள கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் 2ஆம் தொகுதித் தேர்வுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விவரங்களுக்கு 04324-223555, 6383050010 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

News September 2, 2025

கரூர்: சொந்த ஊரில் வங்கி வேலை!

image

கரூர் மக்களே.., உங்கள் சொந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை வேண்டுமா? இந்தியாவின் வங்கிப் பணியாளர் தேர்வாணயம்(IBPS) கிராம வங்கி உதவியாளர் வேலைக்கு 7927 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்விற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!