Karur

News December 13, 2024

தோட்ட வீட்டில் முன்னெச்சரிக்கை: காவல்துறை தகவல்

image

கிராமப்புற தோட்டத்தில் வீடு கட்டி வயதானவர்களை தங்க வைத்துவிட்டு மகன், மகள் பெருநகரங்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவ்வாறு இருப்பவர்கள் சிசிடிவி, நாய் வளர்ப்பு, காவல் நிலையம் சார்ந்த தொலைபேசி எண்கள் வைத்திருத்தல், பணம், நகை அதிகளவு வீட்டில் வைக்காமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை whatsapp குழுவில் பகிர்ந்துள்ளது.

News December 13, 2024

கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 12, 2024

கரூர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

கரூரில் வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. கரூர் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், குளித்தலை அல்லது வட்டார அளவில் உதவிபொறியாளர் இளநிலைபொறியாளர் (வே.பொ)களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் அறிவித்துள்ளார்.

News December 12, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1. கல்லுப்பாலம் சேதம் பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை
2.பஸ் ஸ்டாப்பில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
3.தொழிலாளர் நலவாரிய முகாம்கள் மீது கடும் நடவடிக்கை
4.கிருஷ்ணராயபுரத்தில் 15.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு
5.திருமாநிலையூர் பகுதியில் தொடர் சாரல் மழை

News December 12, 2024

கல்லுப்பாலம் சேதம் பேனர் வைத்த பேரூராட்சி நிர்வாகம்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சி மேட்டுமருதூரில் காட்டுவாரியின் குறுக்கே கல்லுப்பாலம் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கல்லுப்பாலம் மேல்புறம் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக கல்லுப்பாலம் மேலும் சேதம் ஏற்படும் என்பதால் பாலத்தில் வாகனங்கள் செல்ல வேண்டாம் என மருதூர் பேரூராட்சி சார்பில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

News December 12, 2024

கரூரில் முட்டைகளின் விலை நிலவரம் 

image

நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இதில் 5 கோடிக்கு மேல் முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் கோழி முட்டை ரூ.5.90, நாட்டுக் கோழி முட்டை ரூ.10.00 – ரூ.12.00, காடை முட்டை ரூ.7.00, வாத்து முட்டை ரூ.10.00 – ரூ.12.00 ஆகிய விலைகளில் விற்பனை செய்து கொண்டுள்ளது

News December 12, 2024

தொழிலாளர் நலவாரிய முகாம்கள் மீது கடும் நடவடிக்கை

image

கரூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரியம் என பதிவு செய்து நடத்தப்படும் முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களின் இணையதளம் www.tnuwwb.tn.gov.in வாயிலாக தொழிலாளர்கள் பொதுசேவை / இ.சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 12, 2024

கரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை காரணமாக கரூரில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கரூரில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 11, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.அறிவுசார் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
2.கரூரில் அதிமுக நிர்வாகி திமுகவில் தஞ்சம்
3.கரூர் கரும்பு விவசாயிகள் எதிர்பார்ப்பு
4.கரூரில் எஸ் பி அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு கூட்டம்
5.புனித சவேரியார் 15ஆம் ஆண்டு தேர் திருவிழா நிகழ்ச்சி

News December 11, 2024

அறிவுசார் மையத்தை  ஆய்வு செய்த ஆட்சியர் 

image

கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அறிவுசார் மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் இ.ஆ.ப மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் ஆகியோர் இன்று (11.12.2004) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் மாநகராட்சி ஆணையர் சுதா உடன் இருந்தனர்.

error: Content is protected !!