India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று குளித்தலையில் கரூர் மாவட்ட திமுக கட்சி தொழிலாளர் அணித்தலைவரும் குளித்தலை நகர் மன்ற உறுப்பினருமான ஜெய்சங்கரின் இல்ல திருமண விழாவில் முப்பெரும் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, நகர மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடவூர் தாலுகா பள்ளி கவுண்டனூரை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (26). அதே பகுதியைச் சேர்ந்த அருள்ஜோதியை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 16ஆம் தேதி தனது குழந்தையை பார்க்கச் சென்ற ராஜபாண்டியன் குடும்பத்தாரை, அருள்ஜோதியின் தந்தை மாணிக்கம் உள்ளிட்ட 7 பேர் தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். சிந்தாமணிபட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் மொத்தம், 637 ரேஷன் கடைகள் உள்ளன. 3,31, 513 கார்டுதாரர்கள் உள்ளனர். இதுவரை மொத்த பயனாளிகளில், 82.33 சதவீதம் பேர், அதாவது 2,72, 948 பேர் மட்டுமே பரிசு தொகுப்பு பெற்றிருந்தனர். இன்னும், 53,565 பேர் பரிசு தொகுப்பு பெறவில்லை. 50 சதவீதம் பேர் கூட வாங்காத கடைகளில், கையில் இருப்பு உள்ள பொங்கல் தொகுப்பை விநியோகம் செய்ய வேண்டும் என, அதிகாரிகள் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கரூரில் 2.30 மி.மீ., அரவக்குறிச்சியில் 7 மி.மீ., க.பரமத்தியில் 2.30 மி.மீ., தோகைமலையில் 5 மி.மீ., பஞ்சபட்டியில் 3.60 மி.மீ., குளித்தலையில் 1.50 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் 23.80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இத்தகவலை கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சட்ட ஆலோசகர்களின் ஓராண்டு கால பணி நிறைவடைந்து விட்டதால் புதியதாக சட்ட வல்லுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே உடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் பணி விபரங்களுடன் கரூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு 23.1.2025 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என இன்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலிலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு காலனி பகுதியில் இருந்து வாங்கல் வரை மாபெரும் குதிரை எல்கை பந்தயம் நாளை மாலை 3 மணி அளவில் மின்சாரத்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற இருக்கின்றது. மேலும் போட்டியில் பங்கேற்போர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைப்பு விடுத்துள்ளார்.
கரூர் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.18) காய்கறி விலை நிலவரம்: தக்காளி ரூ.24, கத்தரி ரூ.30, வெங்காயம் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.60, இஞ்சி ரூ.50, சுரைக்காய் ரூ.30, வெண்டை ரூ.25, பச்சை அவரை ரூ.70, பீன்ஸ் ரூ.55, கேரட் ரூ.75, புடலங்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.50, முள்ளங்கி ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.50, புதினா ரூ.60, கொத்தமல்லி ரூ.40, கருவேப்பிலை ரூ.100-க்கு விற்பனை ஆகிறது.
கரூர் மாநகரப் பகுதியில் எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு வெங்கமேடு பகுதியில் எஸ்பி காலனியில் உள்ள எம்.ஜி.ஆர் .அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் நடைபெற்றது. கரூரைச் சார்ந்த எம்.ஜி.ஆர்.இன் தீவிர ரசிகரான எம்ஜிஆர் முத்து என்பவர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆர் வேடம் அணிந்து கட்சியினர் நிர்வாகிகள் முன்பு காட்சியளித்தார். அவரை நிர்வாகிகள் பாராட்டினர்.
மாயனூர் கதவணைக்கு இன்றைய நிலவரப்படி 5359 கனஅடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 4509 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 400 கன அடி நீரும், கட்டளைமேட்டு வாய்க்காலில் 200 கன அடி நீரும், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 250 கன அடி நீரும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகமாக வருகிறது.
பஞ்சப்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் +2 பயிலும் தினேஷ் என்ற மாணவன் காற்று உந்து விசையில் இயங்கும் *Reusable Rocket Model* செய்து, காற்று அழுத்தம் கொடுத்து இயக்கினார். 20 அடி உயரம் சென்று ராக்கெட் உந்து விசையில் செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. பாராசூட் உதவியுடன் ராக்கெட் மாதிரியை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் அற்புதமான செயல்விளக்கத்தை செய்துகாட்டினார்.
Sorry, no posts matched your criteria.