India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1.மாண்டலின் ராஜேஷ் கரூரில் சுவாமி தரிசனம்
2.குளித்தலையில் ஒரு மணி நேரம் பலத்த கனமழை
3.அமைச்சர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி: ஆய்வு செய்த எம்எல்ஏ
4.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
5.வட்டாட்சியரகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் குளித்தலை சார் ஆட்சியர் தி.சுவாதிஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை துறை செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
க.பரமத்தி வடக்கு ஒன்றியம் குப்பம் ஊராட்சியில் பொதுமக்களை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சந்தித்து மனுக்களை பெற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்பகுதியில் உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு மின்சார துறை மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை (28/12/2024) காலை 7 மணி முதல் காலை 10:45 மணி வரை கரூர் மாவட்டத்தில் வாங்கல், சனப்பிரட்டி, காளியப்பனூர், திருமாநிலையூர், மக்கள் பாதை, தென்றல் நகர், கோதூர், கோவிந்தம் பாளையம், ஆத்தூர் பகுதிகளில் பல்வேறு புதிய கட்டடங்களை திறந்து வைக்கிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு கரூர் எம்பி ஜோதிமணி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மன்மோகன் சிங் நவீன இந்தியாவின் பொருளாதாரச் சிற்பியாகவும், சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். 1991ஆம் ஆண்டு மன்மோகன் சிங் கொண்டு வந்த திட்டத்தின் மூலம் இந்திய பொருளாதாரம் வலிமை அடைந்தது. இந்த துயரமான நேரத்தில் மன்மோகன்சிங் குடும்பத்தாருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கரூர் மாவட்ட அஇஅதிமுக சார்பில் – கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று (27.12.2024) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கண்டன நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என என கரூர் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
கரூர் மாவட்டம், சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள, சங்கரா வித்யாலயா பள்ளியில், நேற்று ஆண்டு விழா நடைபெற்று முடிந்த நிலையில், அங்கு பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு, 1800 சதுர அடி முதல் 2800 சதுர அடி வரை, நிலங்கள் வழங்கப்பட்டது. பத்திர செலவையும் பள்ளி நிர்வாகமே ஏற்று கொள்வதாக கூறியுள்ளது. 6.5 கோடி மதிப்புள்ள நிலங்களை பள்ளி நிர்வாகம் 11 ஊழியர்களுக்கு வழங்கியது.
கரூர் காந்திகிராமம், சணப்பிரட்டி மற்றும் தான்தோன்றிமலை, ராயனூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீர் குழாய்கள்புலியூர் பகுதியில் ஏர்டெல் நிறுவனம் Trenchless method முறையில் கேபிள் பதிக்கும் பணிகள் மேற்கொண்ட பொழுது 8க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய்கள் பழுது அடைந்துள்ளதால் பிரதான குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக கரூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த மலைக்கோவில் செங்குத்தாக 1,017 படிகளை கொண்டது. ரோப்கார் சேவை வசதியை மூன்று மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை வரும் 28,29 /12/2024 ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தப்படுகிறது என கோவில் செயல் அலுவலர் தங்கராஜீ கூறியுள்ளார்.
கரூர் எம்.பி ஜோதிமணி இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கல்வி பயிலும் இடங்களிலே மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிச்சயம் அச்சுறுத்த கூடியது . பாலியல் குற்றவாளியின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்பொழுதுதான் பெண்கள் பாதுகாப்பு உணர முடியும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.