Karur

News January 6, 2025

 திமுகவில் இணைந்த உறுப்பினர்கள்

image

கரூர் கிழக்கு ஒன்றியம், நெரூர் தென்பாகம், அம்பேத்கர் நகர் கிளைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் மற்றும் நெரூர் வடபாகம், சின்ன காளிபாளையம் கிளைச் செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் 20 நபர்கள் அதிமுகவில் இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகத்தில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தேர்வைத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்தனர்.

News January 5, 2025

கரூர் ஆட்சியர் நாளை கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (06.01.2025) காலை 10.00 மணி அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 2025-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளார்கள். அத்தருணத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News January 5, 2025

கரூரில் திமுகவில் இணைந்த மாற்றுகட்சியினர்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயாதீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இன்று இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News January 5, 2025

கிராவல் மண் திருட்டை தடுக்க கலெக்டரிடம் பாமக மனு

image

கரூர் மாவட்ட பாமக செயலாளர் பாஸ்கரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் தினமும் அனுமதியின்றி கிராவல் மண் திருடப்பட்டு வழக்கு பதியப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கிராவல் மண் திருட்டை தடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் மாவட்ட பா ம க சார்பில் நாளை கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட உள்ளது. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

News January 5, 2025

ரூ.2.03 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி தொடக்கம்

image

கரூர் சட்டமன்ற தொகுதி, மண்மங்கலம் முதல் பண்டுதகாரன் புதூர் வரையில், பெரியவள்ளிபாளையம் – சின்னவள்ளிபாளையம் சாலையை, ரூபாய் 2.03 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

News January 5, 2025

கரூர் மக்களே பொங்கல் தொகுப்பில் குறையா? உடனே இத செய்யுங்க

image

கரூரில் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அந்தந்த நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும். குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800- 425-5901 ஆகிய வட்ட அளவிலும், கரூரில் 9445000266 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 5, 2025

ரூ. 3.75 கோடி மதிப்பில் பாலப் பணி: தொடங்கி வைத்த அமைச்சர்

image

கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்ற தொகுதி அரசு காலனி – பஞ்சமாதேவி – நெரூர் சாலையில் ரூ. 3.75 கோடி மதிப்பில் 4.00 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலையை இருவழி தடமாக அகலப்படுத்தி, ஏற்கனவே இருக்கும் குழாய் பாலத்தை பெட்டி பாலமாக மாற்றும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

News January 5, 2025

கரூர்: அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டிய நான்கு பேர் மீது வழக்கு

image

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரூர் மாநகராட்சியுடன் ஆண்டான் கோவில் கிழக்கு ஊராட்சி, ஏமூர் ஊராட்சிகளை இணைத்து அரசு உத்தரவிட்டது. இதைக் கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் போஸ்டர் அச்சிடப்பட்டது. அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டியதாக போஸ்டர் ஒட்டிய கூலித் தொழிலாளர்கள் நவீன் குமார், குகன்,மோகன்ராஜ், மாயவன் ஆகிய நான்கு பேர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 4, 2025

கரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மாணவ, மாணவி யருக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்யலாம். தேர்ச்சி பெற்றவர்களும், 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால்மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு WWW.TAHDCO.COM. இணையத்தை பார்க்கவும்

News January 4, 2025

அமலாக்கத்துறை சோதனை: கரூர் எம்பி பேட்டி

image

அமலாக்கத்துறைக்கு எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களை தவிர, வேறு திசைகள் தெரிவதில்லை எனவும், பாஜக, RSS-ஐ எதிர்க்கும் மாநிலங்களில் அமலாக்கத்துறை டென்ட் போட்டு தங்கிவிடுகிறது எனவும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கரூர் மாவட்டத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று ( 04/01/2025) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!