Karur

News September 27, 2025

கரூர்: +2 படித்தால் உடனடி அரசு வேலை!

image

கரூர் மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளை கடைசி (28.09.2025) தேதி ஆகும். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 27, 2025

கரூர்: அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!

image

கரூர் மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.18. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 27, 2025

கரூர்: ஆதார் கார்டில் பிரச்னையா..? உடனே CALL!

image

கரூர் மக்களே.., வருகிற அக்.1ஆம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

News September 27, 2025

கரூர்: வடமாநிலப் பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

கரூர்: மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரபியுல்லா காரிக்கர். இவரது மனைவி சிரிவ்வா பிபி(36) இவர் கரூரில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், சரிவ்வா பிபியின் ரூ.7,000 பணத்தை ரபியுல்லா எடுத்ததாகத் தெரிகிறது. இதனால், கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சரிவ்வா பிபி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News September 27, 2025

கரூரில் அரசு பள்ளி ஆசிரியர் பரிதாப பலி!

image

விருதுநகர், சிவகாசியைச் சேர்ந்த தங்கப்பாண்டி (44), கரூர் பூசாரிப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் மனைவி தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News September 27, 2025

கரூர்: மது போதையில் விஷம் குடித்த தொழிலாளி!

image

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கள்ளப்பள்ளி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் (28). பிளம்பிங் தொழிலாளியான இவர், நேற்று குடிபோதையில் விஷமருந்தைக் குடித்துள்ளார். உறவினர்கள் அவரை கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் தாயார் ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில், மாயனூர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 26, 2025

கரூர்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வதியம் குடித்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் 90. அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் புகையிலை விற்ற நடராஜன் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.

News September 26, 2025

கரூர் 7,369 பேர் தேர்வு எழுதுகின்றனர்

image

கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி–II மற்றும் II A)-க்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு 28.09.2025 அன்று நடைபெறவுள்ளது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். இதற்காக 27 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மொத்தம் 7,369 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 26, 2025

கரூர்: குரூப் 2 தேர்வு பயிற்சி வகுப்பு பதிவு செய்ய அழைப்பு!

image

கரூர், வெண்ணைமலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், TNPSC குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அக்.2வது வாரத்தில் தொடங்கவுள்ளன. சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. எனவே, ஆர்வமுள்ளோர் உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News September 26, 2025

கரூர்: ஜிஎஸ்டி புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்!

image

கரூர் மக்களே, ஜி.எஸ்.டி. (GST)தொடர்பான புகார்கள் இருந்தால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நீங்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். இதற்காக, தேசிய நுகர்வோர் உதவி மையம் வெளியிட்டுள்ள இலவச தொலைபேசி எண்கள்: 1800-11-4000 அல்லது consumerhelpline.gov.in என்ற இணையதளத்திலும் ஜி.எஸ்.டி. குறித்து உங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம்.இதை மற்றவர்களுக்கு SHAREபண்ணுங்க.

error: Content is protected !!