India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த வேலுச்சாமி புரத்தில் பதிவான அனைத்து சிசிடிவி ஆதாரங்களை காவல்துறை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பரப்புரை செய்த இடத்தில் உள்ள அனைத்து சிசிடிவி ஆதரங்களையும் காவல்துறை கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் கரூரில் பலியானோர் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வி செலவை எஸ்.ஆர்.எம் குழுமம் ஏற்கும் என ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். மேலும் பலியானோரின் குடும்ப பிள்ளைகளின் தற்போதைய கல்வி நிறுவனங்களுக்கே கல்வி கட்டணம் செலுத்தப்படும் எனவும் கூறினார்.

“தவெகவினர் அனுமதி கேட்ட லைட்ஹவுஸ் ரவுண்டனாவும், உழவர் சந்தை பகுதியில் மிக குறுகலான பகுதி. பரப்புரையில் கல்வீச்சு சம்பவங்கள் இல்லை. கரூர் ரவுண்டானாவுக்கு விஜய் வரும்போதே மாலை 6 மணி ஆகிவிட்டது. காவல்துறைக்கு போதிய ஒத்துழைப்பு இல்லை. 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது” என சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்.

உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை என தவெக தலைவர் விஜய் ட்வீட்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக நீடிக்கிறது. இந்தநிலையில் கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கும் இரங்கள் தெரிவித்துள்ள பிரமர் மோடி, தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும்
காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி விபத்துக்குள்ளாகி இறந்தவர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் இறந்தவர்களின் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக மைய எண்கள் 04324-256306,7010806322 என்ற எண்களில் விபரங்கள்தெரிந்து கொள்ளலாம்

கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பரப்புரையில் நெரிசல் ஏற்பட்டு மூச்சு திணறி 39 பேர் பலியாகினர். இதில் ஒரு மாதத்தில் திருமணமாக உள்ள நிச்சயம் முடிந்து ஜோடிகள் நேற்று கூட்ட நெரிசலில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வாகனம் மூலம் அனுப்பி வருகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்கியதாகவும், மிகவும் வேதனையளிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், காயமடைந்தோருக்கு ஆறுதல்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் இன்று (செப்.27) நடத்திய பரப்புரை கூட்டதில் சிக்கி தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பரப்புரையில் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 12 ஆண்கள், 17 பெண்கள் , 5 ஆண்கள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் உயிரிழந்தவர்களில் ஹேமலதா, சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகிய என மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் அனைவரையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூரில் நேற்றிரவு தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த துயரைச் சம்பவத்தை தொடர்ந்து, கரூர் மாவட்டம் முழுவதும் இன்று (செப்.28) கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.