Karur

News February 22, 2025

My v3ads-ல் முதலீடு செய்தவரா நீங்கள்?

image

கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, கரூர் மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.

News February 22, 2025

கரூரில் காணொளி காட்சியில் திறந்து வைக்கும் முதல்வர் 

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.02.2025) காலை 10.00 மணி அளவில் மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை காணொளி காட்சி வழியாக திறந்து வைக்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

News February 21, 2025

கரூர்: பள்ளி மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

image

தமிழக பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அண்மை காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ
,அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் 14417 என்ற எண்ணில் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 21, 2025

ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்

image

ரயில்வேயில் 32,438 குரூப் டி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News February 21, 2025

போர்வெல் பணியில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

image

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே முன்னூர் கிராமம் கிரசர்மேடு பகுதியில் நேற்று போர்வெல் வேலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலட்சியமாக போர்வெல் லிப்டை தூக்கிய போது மேலே சென்ற மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே போர்வெல் லாரி ஓட்டுநர் சதீஷ் 38 , லாரி உரிமையாளர் பாலசுப்பிரமணியன் 48 ஆகிய இருவரும் உயிரிழந்தனர். க.பரமத்தி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

News February 21, 2025

100 பேருக்கு தலா ஒரு லட்சம் பரிசு 

image

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர், அமைப்பு என 100 பேருக்கு “பசுமை சாம்பியன் விருது” வழங்கி தலா ஒரு லட்சம் வீதம் பணமுடிப்பு வழங்க உள்ளது. முன்மாதிரியான பங்களிப்பு அளித்த அமைப்பு, பள்ளி, கல்லூரி, தனிநபர், தொழிற்சாலைக்கு விருது வழங்கப்பட உள்ளது. விபரங்களுக்கு www.tnpcb.gov.in. கரூர் கலெக்டர் தகவல்.

News February 21, 2025

கரூரில் கார் ஓட்டும்போது ஹார்ட் அட்டாக்

image

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே நாமக்கல் பகுதி சேர்ந்த ரமேஷ் என்பவர் கரூர் டு திருச்சி சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காரை ஓரமாக நிறுத்திய அவர் அங்கேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி புகார் கொடுத்ததன் அடிப்படையில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News February 21, 2025

கரூரில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு

image

கரூரில் தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விக்கான தேசிய மையம் சார்பில் பிப்ரவரி 28ஆம் தேதி நகை மதிப்பீட்டாளர் மற்றும் அடகு கடை தொழில் தொடர்பான தங்கம் மற்றும் வெள்ளியின் தரம் பார்க்கும் 5 நாட்கள் பயிற்சி துவங்க உள்ளது. எனவே இந்த வாய்பை பயன்படுத்தி தொழில் துவங்கவும் & வேலை வாய்ப்பு பெறவும் இப்பயிற்சி உறுதுணையாக இருக்கும் முன்பதிவு செய்ய இந்த நம்பருக்கு 98849 68920 / 87544 83083 தொடர்பு கொள்ளலாம்

News February 20, 2025

கரூர் தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கரூர் மாவட்டத்தில் மட்டும் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க<<>> வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 20, 2025

மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி உயிரிழப்பு

image

கரூர், தோரணக்கல்பட்டி அருகே பண்டுகாரன் புதூரைச் சேர்ந்தவர் அருக்காணி (90). இவருக்கு மூச்சிரைப்பு மற்றும் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 14ஆம் தேதி வழக்கமான மாத்திரைகளுக்கு பதிலாக அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டு மயங்கியுள்ளார். அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாந்தோணிமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

error: Content is protected !!