Karur

News January 16, 2025

காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலை ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழநதுள்ளர். காளை முட்டியதில் பலத்த காயமடைந்த, குழுமணி அருகே சமுத்திரத்தை சேர்ந்த குழந்தைவேலு (67) என்பவர், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 16, 2025

கரூரில் குதிரை எல்கை பந்தயம்: 1.80 லட்சம் பரிசு

image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்ட திமுக சார்பில் ஜன 19 ஞாயிறு மாபெரும் குதிரை எல்கை பந்தயம் நடைபெறுகிறது. பெரிய குதிரைக்கு 10மைல் தூரம், சிறிய குதிரைக்கு 8 மைல், புதிய குதிரைக்கு 6மைல் தூரமாகும். மொத்த பரிசாக ரூ.1.80 லட்சம். போட்டிகளை முத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பரிசுகளும் வழங்குகிறார். போட்டியில் பங்கேற்க முன்பதிவிற்கு 99445 28767

News January 16, 2025

மாயனூர் கதவணைக்கு 5059 கன அடி நீர்வரத்து

image

மாயனூர் கதவணைக்கு இன்றைய நிலவரப்படி 5359 கனஅடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 4509 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 400 கன அடி நீரும், கட்டளைமேட்டு வாய்க்காலில் 200 கன அடி நீரும், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 250 கன அடி நீரும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகமாக வருகிறது.

News January 16, 2025

ஜல்லிக்கட்டு: செந்தில் பாலாஜி ஹேப்பி நியூஸ்!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 7 மணி முதல் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் சிறந்த காளையாக முதலிடம் பெறும் காளை உரிமையாளருக்கு ஒரு கார் மற்றும் இரண்டாவது சிறந்த காளை உரிமையாளருக்கு ஒரு பைக் தனது சொந்த நிதியிலிருந்து பரிசாக வழங்க உள்ளதாக செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

News January 15, 2025

 மாட்டு பொங்கல் அலங்கார பொருட்கள் விற்பனை படுஜோர்

image

கரூர் ஜவஹர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை அலங்கார பொருட்கள், ரூ 100 முதல், 500 வரை விற்பனை செய்யப்பட்டு விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதில் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் கால்நடைகளை குளிப்பாட்டி, பல வண்ணங்களில் மூக்காணங்கயிறு, தும்பு கயிறு, மணி சங்கு, திரு காணி, சாட்டைகள், கழுத்து மணி ஆகிய விற்பனை செய்யப்படுகிறது.

News January 14, 2025

அதிமுக சார்பில் Ex அமைச்சர் பொங்கல் வாழ்த்து

image

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடன், உவகையுடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், நம் மக்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி, எனது அன்பிற்குரிய மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

News January 14, 2025

அமைச்சர் செந்தில்பாலாஜி பொங்கல் வாழ்த்து

image

கரூரில் தன்மானத் தமிழர் திருநாளாம், வருடம் முழுக்க தனக்கு ஈடு கொடுத்து உழைத்திடும் மாடுகளுக்கும், வாழ்நாள் முழுக்க சூடு கொடுத்து காத்திடும் உதயசூரியனுக்கும் நன்றி தெரிவிக்க தமிழர்களின் கொண்டாடும் தவத்திருநாளாம், செங்கரும்பாய் தித்திக்க, அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும், அனைவரின் இல்லங்களிலும் இன்பம் பெருகட்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.

News January 14, 2025

கரூரில் பொங்கல் விளையாட்டு போட்டி துவக்கம்

image

இன்று புகலூர் நகராட்சியில் திமுக கட்சியின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கி பிறகு விளையாட்டு போட்டியை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ துவக்கி வைத்து சிறப்பித்தார். உடன் நகர மன்ற தலைவர் குணசேகர், நகர மன்ற துணைத் தலைவர் நவாஸ்கான், மாமன்ற உறுப்பினர்கள், அவை தலைவர் வாங்கிலி, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 14, 2025

கரூர் காவல் கண்காணிப்பாளர் சட்ட ஆலோசகர் தேவை

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சட்ட ஆலோசகருக்கான ஓராண்டு கால பணி நிறைவடைந்து விட்டதால் புதிதாக சட்ட வல்லுநர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் பணி விவரப் பட்டியலுடன் கரூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நாளைக்குள் (15.01.2025) சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

News January 13, 2025

கரூரில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்வு

image

கரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ. 2,200,முல்லைப் பூ ரூ.2,000,செவ்வந்திப்பூ ரூ.180, அரளிப்பூ ரூ.300,ரோஜாப்பூ ரூ.200, சம்பங்கி பூ ரூ.300, துளசி 4 கட்டு 60 , மருவு 4 கட்டு 120 என விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.பூக்கள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது.

error: Content is protected !!