India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1)இந்தியன் வங்கி: https://indianbank.bank.in/career/
2)மத்திய காவல் துறை : https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_DPCE_2025.pdf
3) SBI வங்கி: https://sbi.bank.in/web/careers/current-openings
4)மத்திய அரசு பள்ளி: https://drive.google.com/file/d/1H3Qkx7qhQ7SwvX1jCAfjn1kNvji0-Biy/view
5)இந்திய மேலாண்மை நிறுவனத்தில் வேலை:www.iimtrichy.ac.in
(SHARE IT)

கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப்பொது செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி இருவரும் தலைமறைவாகிய நிலையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு இன்று ஆக.03 உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.

கரூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்.21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு இங்கே <

கரூர் மாவட்டம் கம்பளியம்பட்டி சேர்ந்த நாகராஜ் மனைவி ராஜகுமாரி (32); இவர்கள் இருவரும் கடந்த 30ஆம் தேதி தாராபுரம் வந்த போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த நாகராஜ் கட்டையால் தாக்கியதில் ராஜகுமாரி பலியானார். இதனையடுத்து தப்பிய ஓடிய நாகராஜை தாராபுரம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

கரூரில் நாளை, அக்டோபர் 4-ஆம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் ஐந்து துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது: ஆண்டிசெட்டிப்பாளையம் துணை மின்நிலையம், ராஜபுரம் துணை மின்நிலையம், தென்னிலை துணை மின்நிலையம், மலைகோவிலூர் துணை மின்நிலையம், நொய்யல் துணை மின்நிலையம், பொதுமக்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.SHAREit

அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர் பாலம் அருகே சுருதீஸ்வரன் மற்றும் அவரது தாயார் நாகஜோதி இருவரும் அவர்களது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு முன்னால் சரவணன் ஓட்டி சென்ற ஈச்சர் வேன் திடீரென பிரேக் போட்டதால் ஈச்சர் வேன் பின்புறம் சுருதீஸ்வரன் மோதியதில் படுகாயம் அடைந்து நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அரவாக்குறிச்சி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

கரூரில் நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை (அக்டோபர் 2) இன்று மீண்டும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிதி 10 லட்சம் உதவியை தொகையை எம்பி ஜோதிமணி பாதிக்கப்பட்டவருக்கு வழங்கினார். உடன் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தார்கள்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கே.பேட்டை ஊராட்சி சீகம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (56). இவர் பணிக்கம்பட்டியிலிருந்து அய்யர்மலை செல்லும் சாலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ஆறுமுகம் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.