India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி (38). இவர் அரவக்குறிச்சியில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறார். இவர் பேருந்தில் மணல்மேடு அருகே சென்று கொண்டிருந்த போது பஸ்ஸின் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இதில் ரேவதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
கரூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் கரூர் எஸ்.பி, பெரோஸ்கான் அப்துல்லா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ நாட்டில் அதிகம் விபத்து நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. சாலை விதிகளை பின்பற்றாமல், வாகனங்களில் செல்லும்போது தான் 70% விபத்துக்கள் நடக்கிறது. சாலை விதிகளை பின்பற்றினால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்” என்றார்.
கரூர் மாவட்டம், ராயனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா (30)இவர், அரசு பள்ளியில், எட்டாவது வகுப்பு படித்து வரும், 14 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சதீஷ்குமார், மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன் பேரில் மகளிர் போலீசார் கிருஷ்ணா மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.30) காய்கறி விலை நிலவரம்: தக்காளி ரூ.24, கத்தரி ரூ.30, வெங்காயம் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.40, இஞ்சி ரூ.50, சுரைக்காய் ரூ.15, வெண்டை ரூ.40, பச்சை அவரை ரூ.50, பீன்ஸ் ரூ.70, கேரட் ரூ.70, புடலங்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.50, முள்ளங்கி ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.40, புதினா ரூ.60, கொத்தமல்லி ரூ.40, கருவேப்பிலை ரூ.90-க்கு விற்பனை ஆகிறது.
கரூர் மாவட்டத்தில் கோழி வெள்ளை காய்ச்சல் நோய் தடுப்பு முகாம் இலவச தடுப்பூசி வருகின்ற 01.02.25 முதல் 14.02.25 வரை மாவட்டத்திற்கு 2.15 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே கால்நடை மருத்துவமனை, மருந்தகம், கிளை நிலையங்கள் தடுப்பூசி பெற வேண்டியவர்கள் விவசாயிகள், கோழி வளர்ப்போர் கட்டாயம் பயன்பெற வேண்டும் மேலும் அனைத்து கால்நடை நிலைகளிலும் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.ஆர்.ஓ. தலைமையில், மாவட்டத்தில் அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையாளர்களுடன் குறைதீர் கூட்டம் நாளை (30ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. இதில், நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் புகார்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.இதை தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நுகர்வோர் பாதுகாப்பில் கரூர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு, மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றதைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி முன்னிலையில் கேடயத்தினை, மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் இன்று வழங்கினார்கள். உடன் தலைமைச் செயலாளர் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கரூர் வழியாக இரவு நேரத்தில் மட்டும், சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள், பகல் நேரத்தில் சென்னைக்கு செல்ல சேலம், ஈரோடு, திருச்சி போக வேண்டிய நிலை உள்ளது. இதனால், கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என,பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வரும் பிப்., 1ல் மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகுமா?
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், திட்ட செயலாக்கம் சார்பில் இளம் வல்லுனர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இதில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது தரவு அறிவியல், புள்ளியியல் படிப்பில் இளங்கலை பட்டம் உள்பட இதற்கு இணையான பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் மாதம், 50,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும், 31க்குள் விண்ணப்பிக்கவும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்: (கிலோ ஒன்றுக்கு) தக்காளி ரூ.20 – 24, உருளைக்கிழங்கு ரூ.45- 50, சி.வெங்காயம் ரூ.50- 60, பெ.வெங்காயம் ரூ.45- 50, பச்சை மிளகாய் ரூ.35-40, கத்தரிக்காய் ரூ.25- 30, வெண்டைக்காய் ரூ.45 – 50, பீன்ஸ் ரூ.65-70, அவரை ரூ.50 – 60, கேரட் ரூ.65 – 70, பீட்ரூட் ரூ.55 – 60, தேங்காய் ஒரு காய் ரூ.55 – 65 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.