Karur

News October 9, 2025

கரூரில் சிறப்பு அஞ்சல் உரை வெளியீடு

image

கரூர் தலைமை தபால் நிலையத்தில், தபால் வார விழாவை முன்னிட்டு தபால் தலை சேகரிப்பு தினம் கொண்டாடப்பட்டது. மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை வகித்தார். இந்திய தபால் துறை சார்பில் தபால் வார விழாவானது வரும் அக்.10ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரூர் வீட்டு அலங்கார ஜவுளிகள் சிறப்பு அஞ்சல் உரை வெளியிடப்பட்டது.

News October 9, 2025

பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 11.10.2025 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு செய்துள்ளார்.

News October 8, 2025

கரூர்: ரூ.35,400 சம்பளத்தில் அரசு வேலை அறிவிப்பு!

image

கரூர் மக்களே மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 2,861 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் (16.10.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 8, 2025

கரூர் வெள்ளியணை அருகே சோகம்!

image

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள தடிக்கரிசனூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்த பிறகு, இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க முடியாமல் பல மாதங்களாக மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். இதனால், மன விரக்தியில் இருந்த சந்திரசேகர், நேற்று திடீரென பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை

News October 8, 2025

கரூர்: வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க.!

image

கரூர் மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News October 8, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில், பரமத்தி வட்டாரம் எல்லமேடு வி கே பி மண்டபத்திலும், கரூர் நகர பகுதிகளுக்கு சின்ன கொங்கு மண்டபத்திலும், கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதிகளுக்கு கொசூர் சமுதாய கூட்டத்திலும், தோகைமலை வட்டாரத்திற்கு விபிஆர்எஸ் கட்டிடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று நடைபெற இருக்கின்றது. என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News October 8, 2025

கரூரில் 100% மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு!

image

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும் என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://tnhorticulture tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணைப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News October 8, 2025

கரூர்: மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு அறிவிப்பு!

image

கரூர் மக்களே 2025-ம்‌ ஆண்டு டிசம்பர்‌ 13 மற்றும்‌ 14 ஆகிய தேதிகளில்‌ மின்கம்பியாள்‌ உதவியாளர்‌ தகுதிகாண்‌ தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெற உள்ளது.விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.விண்ணப்பப்‌ படிவம்‌ மற்றும் விளக்கக் குறிப்பேட்டை http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. இதனை SHARE பண்ணுங்க

News October 8, 2025

கரூரில் அதிர்ச்சி..தாலி கட்ட முயற்சித்த இளைஞர் மீது வழக்கு!

image

கரூர் மாவட்டம், திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி (47). இவரது மகள் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் அங்கு வந்து, அந்தப் பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து உமாபதி அளித்த புகாரின் பேரில், மாயனூர் போலீசார் சந்தோஷ் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 8, 2025

கரூர்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

கரூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த லிங்கில் <>கிளிக்<<>> செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!