India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம், திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி (47). இவரது மகள் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் அங்கு வந்து, அந்தப் பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து உமாபதி அளித்த புகாரின் பேரில், மாயனூர் போலீசார் சந்தோஷ் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த லிங்கில் <

கரூர் மாவட்டத்தில் 02.10.2025 காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் 11.10.2025 அன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

தோகைமலை அருகே கழுகூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு மயானம் உள்ள இடத்தை சுற்றியுள்ள இடங்களை சிலர் ஆக்கிரமித்து சுமார் 50 சென்ட் நிலமாக இருந்த மயானம் தற்போது 10 சென்ட் நிலமாக சுருங்கி விட்டது. மேலும் அங்கிருந்த வேப்ப மரங்கள் மற்றும் சீமை கருவேல மரங்களை சிலர் வெட்டி கடத்தி வந்து உள்ளனர். தகவல் அறிந்த கழுகூர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Classes Education in schools for OBC, EBC & DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship portal) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 15.10.2025 வரை https://bcmbcmw.tn.gov.in/welfschemes.html நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

கரூரில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இந்த <

கரூர் மக்களே.. உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <

கரூர் மாவட்டத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சி வகுப்பு திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் (அக்.18) துவங்க உள்ளது. இப்பயிற்சிக்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9442380705, 04312715748, 9994647631 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரா.அபிராமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் தங்கவேல் கலந்து கொண்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சலவைப்பெட்டி, பயிற்சி சான்றுகள் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், குளித்தலை சார்-ஆட்சியர் தி.சுவாதிஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.