Karur

News February 8, 2025

கரூரில் 5 ஆண்டுக்குப் பிறகு கைதான குற்றவாளி

image

கரூர் மாவட்டம் வெள்ளியணை மணவாடி பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு இரட்டை கொலை வழக்கு சம்பந்தமாக நடைபெற்று வந்த குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த 23வது பிரவீன் என்கிற வெங்கடேஷ்(29) இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டு, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

நேரடி நெல் கொள்முதல் நிலையம்: பார்வையிட்ட ஆட்சியர்

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் வீரராக்கியத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக நடைபெற்று வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன், வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தன் ஆகியோர் உள்ளார்.

News February 8, 2025

கரூர் 91,245 கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி

image

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகளின் கேள்விகளுக்கு கலெக்டர் பதிலளித்தார். அப்போது கரூர் மாவட்டத்தில் கடந்த ஜன.,1 முதல், 14 வரை கால்நடை மருத்துவ துறை சார்பில் வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, 91,245 நாட்டு கோழிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

News February 8, 2025

போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றவருக்கு எலும்பு முறிவு

image

லாலாப்பேட்டை அடுத்த கருப்பத்தூரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடை வீதியில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த வெட்டுசங்கர் (35) என்பவர் நாகராஜிடம் தகராறில் ஈடுபட்டு வாழை இலை அறுக்கும் கத்தியால் நாகராஜின் தலையில் வெட்டினார். லாலாபேட்டை போலீசார் நேற்று வெட்டுசங்கரை பிடிக்க முயற்சித்தனர். தப்பி ஓடி பாலத்தில் இருந்து குதித்து அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாம். சிகிச்சைக்காக கரூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

News February 7, 2025

ரூ.35 ஆயிரம் பறித்துச் சென்ற 2 மர்ம நபர்கள்

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா பள்ளி கவுண்டனூரைச் சேர்ந்தவர் சண்முகம் 23. இவர் ஹிட்டாச்சி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி வேலை செய்த பணத்தை பெற்றுக் கொண்டு தனது பைக்கில் புழுதேரி சாலையில் வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 நபர்கள் சண்முகத்தை வழிமறித்து பாக்கெட்டில் இருந்த ரூபாய் 35 ஆயிரம் பறித்துச் சென்று விட்டனர். தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.

News February 7, 2025

கரூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

image

கரூர் ரயில் நிலையம் அருகே மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி நேற்று பிற்பகலில் விரைவு ரயில் அமராவதி ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் மோதி தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து கரூர் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்துவருகின்றனர்.

News February 6, 2025

கரூர்: நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்

image

உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய இங்கே <>கிளிக் <<>>செய்யவும்.மேலும்,9655864426 என்ற எண்ணுக்கு What’s App பண்ணுங்க.

News February 6, 2025

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை..உடனே விரையுங்கள்!

image

பிரபல தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக Relationship Manager பதவிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.09 ஆகும் .மேலும் விவரங்களுக்கு இந்த <>லிங்க்-கை<<>> க்ளிக் செய்யவும்.இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News February 6, 2025

கரூர்: ரயில் சேவையில் மாற்றம்

image

கரூர் திருச்சி மார்க்கத்தில் வீரராக்கியம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (பிப்.7) ரயில்களின் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு டவுன் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் வரை வந்து கரூரில் நின்று விடும். மயிலாடுதுறை சேலம் பயணிகள் எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறையில் கிளம்பி வீரராக்கியத்தில் நின்றுவிடும். சேலம் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மதியம் 3.40 கரூரில் இருந்து கிளம்பும்.

News February 6, 2025

குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைதீர் நாள் கூட்டம்

image

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (08.02.25) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!