India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர்: வாங்கல் அருகே, மோகனூர் சாலையில், செல்லப்பன் என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அதே வழியில் தமிழ்நாடு அரசு பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே செல்லப்பன் பலியானார். மேலும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து வாங்கல் போலீசார் நேற்று அரசு பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கரூர்: கிராமப்புற இளைஞர்கள் மூன்று மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில், மாநில ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் கிராமப்புற இளைஞர்களுக்கு மூன்று மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர கட்டணம், ரூ.1,000. இதற்கு https://forms.eduqfix.com/certificate/add இணையதளம் வாயிலாக செலுத்தப்பட வேண்டும்.

கரூர் தலைமை தபால் நிலையத்தில், தபால் வார விழாவை முன்னிட்டு தபால் தலை சேகரிப்பு தினம் கொண்டாடப்பட்டது. மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை வகித்தார். இந்திய தபால் துறை சார்பில் தபால் வார விழாவானது வரும் அக்.10ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரூர் வீட்டு அலங்கார ஜவுளிகள் சிறப்பு அஞ்சல் உரை வெளியிடப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 11.10.2025 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு செய்துள்ளார்.

கரூர் மக்களே மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 2,861 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள தடிக்கரிசனூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்த பிறகு, இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க முடியாமல் பல மாதங்களாக மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். இதனால், மன விரக்தியில் இருந்த சந்திரசேகர், நேற்று திடீரென பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை

கரூர் மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

கரூர் மாவட்டத்தில், பரமத்தி வட்டாரம் எல்லமேடு வி கே பி மண்டபத்திலும், கரூர் நகர பகுதிகளுக்கு சின்ன கொங்கு மண்டபத்திலும், கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதிகளுக்கு கொசூர் சமுதாய கூட்டத்திலும், தோகைமலை வட்டாரத்திற்கு விபிஆர்எஸ் கட்டிடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று நடைபெற இருக்கின்றது. என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும் என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://tnhorticulture tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணைப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

கரூர் மக்களே 2025-ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெற உள்ளது.விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டை http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.