Karur

News February 25, 2025

ரயில்வே தேர்வுக்கு தேதி மீண்டும் நீட்டிப்பு

image

கரூரில் ரயில்வே தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.25 என நீட்டிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு என கருவூரார் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகாடமியில் தங்கும் விடுதி வசதி உள்ளது. மேலும் தகவலுக்கு 9514146000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனவே மாணவர்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News February 25, 2025

நாகனூரில்  நகை மற்றும் பணம் திருட்டு

image

தோகைமலை ஒன்றியம் நாகனூர் ஊராட்சியில் உள்ள காலனியை சேர்ந்தவர் முருகேசன் (45) டெக்ஸ் கூலித் தொழிலாளி கரூர் டெக்ஸ்டைல்ஸ்க்கு வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து பார்த்தபோது. பீரோவில் இருந்த ஐந்து பவுன் தங்க நகை மற்றும் ரூ 45 ஆயிரம் ரொக்க பணமும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து முருகேசன் அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 25, 2025

கரூர் இன்றைய மின்தடை அறிவிப்பு

image

கரூரில் இன்று (25-02-2025) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். அய்யம்பாளையம், சீத்தாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி. அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு.

News February 25, 2025

“பேண்ட்” கேட்டு அண்ணியை தாக்கிய கொழுந்தனார் மீது வழக்கு

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்தவர் ஜோதிவேல் மனைவி குயின் 32. இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டிலிருந்த போது அங்கு வந்த இவரின் கொழுந்தனார் ஜெய்வர்மன் தனது பேண்ட் வீட்டில் இருப்பதை எடுத்து தர கேட்டுள்ளார். அதற்கு இங்கு இல்லை என கூறிய குயினை திட்டி கையைப் பிடித்து முறுக்கி தலைமுடியை பிடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். லாலாபேட்டை போலீசார் இன்று வழக்குப்பதிவு.

News February 24, 2025

கன்று வீச்சு நோய் தடுப்பூசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கன்று வீச்சு நோய் தடுப்பூசி ஏற்கனவே கன்றுகளுக்கு 4 கட்டங்களாக போடப்பட்டுள்ளது. தற்போது ப்ரூசெல்லோசிஸ் தடுப்பூசி 5 ஆம் கட்டமாக வரும் 20 பிப்ரவரி முதல் 19 மார்ச் வரை கரூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் போடப்படவுள்ளது. இத்தடுப்பூசி 4-8 மாத வயதுடைய பெண் கன்றுகளுக்கு மட்டுமே போடப்பட வேண்டும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் இன்று அறிவிப்பு.

News February 24, 2025

தவறான தகவலை பரப்பாதீங்க

image

கரூரில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக தவறான தகவல் வெளியாகியுள்ளது என கரூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், மாணவி, அம்மாணவனை பற்றி இழிவாக பேசியதால் கோவத்தில் மாணவன் கத்தியால் தாக்கியுள்ளார். மேற்படி மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். தவறான தகவலை பரப்பாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கரூரில் மட்டும் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்<<>>. ஷேர் பண்ணுங்க

News February 24, 2025

சிறுமி திருமணம் மூன்று பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு

image

புதுச்சேரி மாநிலம், காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 23. இவர் கடந்தாண்டு ஜூலை, 5ல் கரூர் வடக்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்த, 17 வயது எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். தாந்தோணி மலை யூனியன் சமூக அலுவலர் பூங்கொடி அளித்த புகாரின் பேரில் கரூர் மகளிர் போலீசார் 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News February 24, 2025

தன்வி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

image

கரூர் மக்களே, வரும் 25 பிப்ரவரி 2025 செவ்வாய்கிழமை தன்வி மருத்துவமனையின் “இலவச மருத்துவ முகாம்” காலை 9 முதல் 12மணி வரை நடைபெறுகிறது. இதில் ரத்த சோகைக்கான ரத்த பரிசோதனை, ஆசனவாய் குழாய் பரிசோதனை, மூலம், பௌத்திரம், குடலிறக்கம் ஒட்டு குடல் பித்தப்பை கற்கள் வயிறு மற்றும் குடல் புண், ஆகியவைக்கு பரிசோதனை செய்ய முன்பதிவு செய்து ஆலோசனை பெற, தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 90472 46825 என தெரிவித்துள்ளனர்

News February 23, 2025

3 பேரை அறிவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு 

image

குளித்தலை அருகே இனுங்கூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவரின் சித்தப்பா பரமசிவத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் கடந்த 30 வருடங்களாக நிலப் பிரச்சனையில் முன்விரோதம் இருந்துள்ளது. இது சம்பந்தமாக நேற்று ரமேஷ், பரமசிவம் மற்றும் ரமேஷின் அத்தை பழனியம்மாள் ஆகிய 3 பேரையும் முத்துப்பாண்டி அறிவாளால் தாக்கியுள்ளார். இது குறித்து நங்கவரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!