Karur

News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

கரூரில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

image

ஜல்லி, Mசேண்ட் களை கிரசரிலிருந்து ஏற்றுச் செல்லும் பொழுது கிரசர் நிறுவனங்கள் ட்ரான்சிஸ்ட் பாஸ் வழங்குவதில்லை. இதனால் அதிகாரிகள் சோதனை நடத்தி லாரியை பறிமுதல் செய்வதோடு உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்கின்றனர். இதனை கண்டித்து பல்வேறு மாவட்ட லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் உள்ளனர். இதே போல் கரூர் மாவட்டத்திலும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

News February 13, 2025

பைக் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

image

மணல்மேடு புத்தாம்பூர் அருகே உள்ள காளிபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (49). இவரது மகன் யோக பாரதி(15). இருவரும் நேற்று காலை கரூர் திண்டுக்கல் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர் .டெக்ஸ் பார்க் அருகே சென்ற பொழுது மணல்மேடு பகுதியை சேர்ந்த சபரி (21) ஓட்டி வந்த டூ வீலர் மோதியதில் படுகாயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 12, 2025

கரூரில் அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வு

image

கரூர் மாவட்டத்தில்நாளை (13.02.2025)காலை 10.00 மணி அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்ச்சி பெறும் நாகம்பள்ளி, வேலம்பாடி, இளங்கனூர், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மூன்று தொகுதி எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள கலந்துகொள்ள உள்ளனர். 

News February 12, 2025

கரூரில் போதை புகார்கள் குறித்து புதிய செயலி அறிமுகம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதை பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் நடமாட்டம் குறித்து, புகார்களை பதிவு செய்ய மொபைல் செயலி (Mobile App) DRUG FREE TN” பதிவிறக்கம் செய்வது தொடர்பாக, செயல் விளக்க கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News February 12, 2025

டிகிரி போதும்; மாதம் ரூ.72,000 சம்பளம் Apply Now

image

ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 241 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் குறைந்தபட்சம் 35 w.p.m வேகத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.சம்பளமாக 72,040 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

News February 12, 2025

பாத்ரூமில் எரிந்த நிலையில் வாலிபர் உடல்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்கல்பட்டியை சேர்ந்தவர் நாகேஸ்வரன் மகன் தினேஷ்குமார் (25). இவர் பெட்டவாய்த்தலையில் உள்ள சாந்தி மளிகை கடையில் கடந்த 6 மாதமாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 7 ஆம் தேதி முதல் வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கும் வராமல் இருந்து வந்தவர் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் உள்ள பாத்ரூமில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 11, 2025

ரூ. 10 லட்சம் வரை மானியம் பெற வாய்ப்பு

image

மத்திய அரசின் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (Prime Minister Micro Food Processing Enterprise Development Scheme) கீழ், விவசாயிகள் தங்கள் வணிகத்திற்கு ரூ.10 லட்சம் வரை மானியம் பெறலாம். நீங்கள் தொழில் செய்ய விருப்பம் இருந்து பணம் இல்லை என நினைத்தால் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இத்திட்டத்தின் நிபந்தனை என்னவென்றால், விவசாயம் தொடர்பான தொழிலை செய்ய வேண்டும்.

News February 11, 2025

கரூரில் ஓட்டுநர் போக்சோவில் கைது

image

கரூர் தோரணங்கல்பட்டி சாலைப் புதூரில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மாரியப்பன் (31) என்பவர், வீட்டிற்குக் கடத்திக் கொண்டு போய் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் நடந்ததை டவுன் போலீசில் தெரிவித்தார். போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News February 10, 2025

மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு மாவட்ட நிர்வாகம்.

image

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் நாளை மூடி வைக்க வேண்டும் என கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உத்தரவை மீறி மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!