India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திர மாநிலத்திலிருந்து மதுரைக்கு பேருந்தில் கஞ்சாவை கடத்திச் செல்ல கரூர் வழியாக வந்த நபர்களை கரூர் நகர போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இதில் நாகேந்திரன், ராம்குமார், செந்தில்குமார், யோகேஸ்வரன், நவீன்ராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். ரூ.12,000 மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி முன்னுரிமை குடும்ப அட்டைகள் கொண்ட அனைத்து உறுப்பினர்களும் கைவிரல் ரேகை பதிவு செய்வதை மார்ச் 31-ம்தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். எனவே, இதுவரை பதிவு செய்யாத குடும்ப அட்டைகள் வைத்துள்ளவர்கள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியில் புதிதாக பொதுக் கழிப்பிட கட்டுமான பணியில் கடந்த 17ஆம் தேதி பேரூராட்சி செயல் அலுவலர் ருக்குமணி பணியில் இருந்துள்ளார். அப்போது சிலர் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக செயல் அலுவலர் ருக்குமணி புகாரின் பேரில் தியாகராஜன், இளையராஜா, ரூபக், மகாமுனி ஆகிய 4 பேர் மீது மாயனூர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
யூனியன் வங்கியில் 6463 தொழில் பழகுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏதேனும் ஒரு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
கரூர் கோவிந்த பாளையம் ராஜ வாய்க்கால் அருகே கரூர் நகர போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசு அனுமதி இன்றி டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்ட வெங்கடேஷ் 19, அருண்குமார் 33, மணிகண்டன் 28 ஆகிய 3 பேர் மீது கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். 4 யூனிட் மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம், கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி டேனியல் ராஜ், 29. இவர், கரூரில் வஞ்சியம்மன் கோவில் தெருவில் தங்கி, புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, பிப்24 இரவு இவர் அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியின் வீட்டில் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, கரூர் மகளிர் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில், 167 பள்ளிகளில் உள்ள மையங்களில், 14 ஆயிரத்து, 167 மாணவர், மாணவியர் செய்முறை தேர்வு, பத்தாம் வகுப்புக்கு நேற்று முன்தினம் செய்முறை தேர்வு துவங்கி வரும், 28ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இதில் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அடிப்படையில் காலை, மதியம் என இரு நேரமும் செய்முறை தேர்வு நடக்கிறது. மேலும் 10ம் வகுப்புக்கு மார்ச், 28 முதல் ஏப். 15 வரையும் பொதுத்தேர்வு நடக்கிறது.
தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அரவக்குறிச்சி அருகில், புஞ்சை காளக்குறிச்சி தொழிற்பேட்டையில் வணிக மனைகள் மற்றும் தொழில் மனைகள் வாங்க விரும்புவோர் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாகவே மொபைல் எண் 9445006553 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் பில்லாபாளையம் ஊராட்சி காந்தி நகர் காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடக மேடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் கோடங்கிபட்டி பகுதியில் கோவிலில் இன்று வழிபட்டார். பிறகு அப்பகுதியில் உள்ள 89 ஆயிரம் வீடுகளுக்கு நேரில் சென்று சில்வர் பாத்திரம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இதில் துணைமேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர் கனகராஜ், கவுன்சிலர் பழனிச்சாமி, ஒன்றிய பொறுப்பாளர் வேலுசாமி, முருகேசன் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.