Karur

News March 16, 2025

கரூரில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்

image

கரூர், இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளுக்கான அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்புக்கான பதிவு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதற்கு கரூர் உள்ளிட்ட 15 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏப்.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் ஆகிய பிரிவுகளுக்கு ஆன்லைனில்<> www.joinindianarmy.nic.in<<>> என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதை ஷேர் செய்யுங்கள்.

News March 16, 2025

மூதாட்டியிடம் 5 பவுன் தங்கநகை பறிப்பு

image

கரூர் வையாபுரி நகரை சேர்ந்த புஷ்பாத்தாள் (65) 80 அடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் புஷ்பாத்தாள் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து புஷ்பாத்தாள் போலீசில் புகார் செய்தார். இது குறித்து கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 15, 2025

கரூர்: பெண் குழந்தைகளுக்கு கை கொடுக்கும் திட்டம்

image

கரூர், அஞ்சல் அலுவலகளில் செல்வமகள் சேமிப்பு திட்டம்’ செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 முதல் 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். உங்களிடம் பணம் இருக்கும் போது டெபாசிட் செய்யலாம். இதற்கு 8% வட்டி வழங்கப்படுகிறது . இது உங்களின் பெண் குழந்தைகளின் கல்வி, திருமனம் போன்றவைகளுக்கு பயனுள்ளதாக அமையும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 15, 2025

ஈச்சர் வேன் மோதி பைக்கில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலி

image

கரூர் தாந்தோணி மலை வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் பூபதி (49). இவர் நேற்று தனது பைக்கில் கருப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த ஈச்சர் வேன் மோதியதில் பூபதி கீழே விழுந்து பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி தமிழ்ச்செல்வி புகாரின் பேரில் தாந்தோணி மலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை. 

News March 15, 2025

கரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

கரூரில் IT, Customer Care, Data Entry, பல வேலைகள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்யும் போலி ஏஜெண்டுகளிடம் நம்பி ஏமாறாமல் உண்மை தன்மையை உறுதி செய்யவும். போலியான ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு சென்று சைபர் அடிமைகளாக மாறிவிடாதீர்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டு தெரியவந்தால் சைபர் க்ரைம் காவல் நிலையம் எண் 04324-299411 புகார் அளிக்கவும் என மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

’கரூர்’பெயர் வந்தது எப்படி?

image

’கரூர்’ என்கிற பெயர் வந்ததற்கு ஒரு சுவாரஸ்ய புராண காரணம் உண்டு. பிரம்ம பகவானின் கர்வத்தை அடக்க படைப்புத் தொழிலை காமதேனுவிடத்து சிவபெருமான் தந்ததாகவும். அந்த நிகழ்வு நடந்த இடத்தை ’கருவூர்’ அதாவது, ’கரு – வூர்’ உலகின் ’கரு’ உருவான ஊர். அப்படியான நிகழ்வு நடந்த இடமே பசுபதீஸ்வரர் கோவில் என்பது புராணக் கூற்று.

News March 14, 2025

கரூரில் புதிய தொழிற்பேட்டைகள்

image

2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், கரூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் சிட்கோ புதிய தொழிற்பேட்டைகளை அமைக்கப்படும் என்றார். அதன்படி, 17,500 வேலைவாய்ப்பு உருவாகும்.

News March 14, 2025

கரூரில் எச்சில் இலையில் நேர்த்திக் கடனுக்கு தடை

image

நெரூர் சதாசிவ பிரம்மேந்திர கோயிலில் பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் நேர்த்திக்கடன் செய்வதற்கு சென்ற ஆண்டு நீதிபதி சுவாமிநாதன் அனுமதி கொடுத்தார்.தீர்ப்பை ரத்து செய்ய கோரி கரூர் ஆட்சியர் தரப்பிலும்,கோயில் அர்ச்சகர் அரங்கநாதன் தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள் முருகன் எச்சி எல்லையில் நேர்த்தி கடன் செய்வதற்கு தடை விதித்தனர்.

News March 13, 2025

வேலைவாய்ப்பு முகாம் தேதி மாற்றம்

image

கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 15.03.2025 அன்று தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களால் 29.03.2025 சனிக்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 29.3.25 சனிக்கிழமை தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். வேலை நாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login ல் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும் மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 9345261136 எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

error: Content is protected !!