Karur

News March 1, 2025

தேர்வு கிடையாது; இந்திய அஞ்சல் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக செயல்படும் ‘இந்திய அஞ்சல் பேப்மெண்ட் வங்கியில்’ (India Post Payments Bank) உள்ள 51 நிர்வாகி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக தரப்படும். விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 1, 2025

கரூர் பைக் தீப்பிடித்து – முதியவர் பலி

image

கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா துக்கச்சி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 66. இவர் கடந்த 22 ஆம் தேதி தனது பைக்கில் பெட்ரோல் நிரப்பியபோது திடீரென பைக்கில் தீப்பிடித்ததில் பழனிச்சாமி மீது 45% தீப்பிடித்து கொடுமுடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்னிலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.

News March 1, 2025

க.பரமத்தி வெறி நாய்கள் கடித்து 15 ஆடுகள் பலி

image

க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், (60).விவசாயி. இவர், 60க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில், வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப, பட்டிக்கு சென்றார். அப்போது, வெறி நாய்கள் பட்டிக்குள் புகுந்து கடித்ததில், 15 ஆடுகள் உயிரிழந்தன. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். மேலும், வெறிநாய்கள் கடித்து காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

News February 28, 2025

3 நாட்கள் மட்டுமே உள்ளது..உடனே விண்ணப்பியுங்கள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணபிக்க <>இங்கே <<>>க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 28, 2025

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

image

கரூர் மாநகரில் வக்ப் சட்ட திருத்தத்தை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒ.செயலாளர் மகாமுனி, மேற்கு மா.பொருளாளர் சதீஷ் , மேட்டுப்பட்டி தனபால், தர்மராஜ், அரவக்குறிச்சி தொகுதி செயலாளர் ரிபாய்தீன், ஒன்றிய செயலாளர் ஷேக் பரீத், சண்முகம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News February 28, 2025

கரூர் கஞ்சா கடத்தல் 5 பேர் கைது, 

image

ஆந்திர மாநிலத்திலிருந்து மதுரைக்கு பேருந்தில் கஞ்சாவை கடத்திச் செல்ல கரூர் வழியாக வந்த நபர்களை கரூர் நகர போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இதில் நாகேந்திரன், ராம்குமார், செந்தில்குமார், யோகேஸ்வரன், நவீன்ராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். ரூ.12,000 மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News February 28, 2025

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அறிவுறுத்தல்

image

கரூர் மாவட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி முன்னுரிமை குடும்ப அட்டைகள் கொண்ட அனைத்து உறுப்பினர்களும் கைவிரல் ரேகை பதிவு செய்வதை மார்ச் 31-ம்தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். எனவே, இதுவரை பதிவு செய்யாத குடும்ப அட்டைகள் வைத்துள்ளவர்கள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News February 27, 2025

பேரூராட்சி செயல் அலுவலர் மீது மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு

image

கரூர் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியில் புதிதாக பொதுக் கழிப்பிட கட்டுமான பணியில் கடந்த 17ஆம் தேதி பேரூராட்சி செயல் அலுவலர் ருக்குமணி பணியில் இருந்துள்ளார். அப்போது சிலர் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக செயல் அலுவலர் ருக்குமணி புகாரின் பேரில் தியாகராஜன், இளையராஜா, ரூபக், மகாமுனி ஆகிய 4 பேர் மீது மாயனூர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News February 27, 2025

வங்கியில் 6463 காலியிடங்கள் வெளியான சூப்பர் அறிவிப்பு

image

யூனியன் வங்கியில் 6463 தொழில் பழகுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏதேனும் ஒரு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News February 27, 2025

மணல் கடத்தல் 3 பேர் கைது

image

கரூர் கோவிந்த பாளையம் ராஜ வாய்க்கால் அருகே கரூர் நகர போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசு அனுமதி இன்றி டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்ட வெங்கடேஷ் 19, அருண்குமார் 33, மணிகண்டன் 28 ஆகிய 3 பேர் மீது கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். 4 யூனிட் மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!