Karur

News October 16, 2025

கரூர்: கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி!

image

கரூர் டு சின்ன தாராபுரம் சாலையில் அருக்காணி (85) என்ற முதியவர் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் படராம் ஓட்டி வந்த நான்கு சக்கர வாகனம் அருக்காணியின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் நேற்று படராம் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News October 16, 2025

ஜாமீனில் வெளியே வந்த கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள்!

image

கரூரில் கடந்த செப்.27 அன்று நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில், கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் இன்று (அக்.16) திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர். மேலும் ஜாமீனில் வெளி வந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வரவேற்று கரூருக்கு அழைத்துச் சென்றனர்.

News October 16, 2025

கரூர்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

image

கரூர் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <>இந்த<<>> இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

கரூரில் ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா..?

image

கரூர் மக்களே.., வேலை இல்லையா..? உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் தொழில் சார்ந்த இலவச பயிற்சிகளில் இணைந்தால் பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பும் உறுதி. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News October 16, 2025

கரூர்: இந்த மெசேஜ் வந்தால் உஷார்!

image

கரூர் மக்களே.., போலியான வாட்ஸ்ஆப் எண்களில் இருந்து ’Traffic Fine’ என மெசேஜ் வந்தால் ஏமாற் வேண்டாம். உங்களிடம் போலி ஆப்-ஐ பதிவிறக்க செய்து வங்கி விவரங்களை திருடும் மோசடி நடைபெறுகிறது. ஆகையால், அபராத விவரங்களை சரிபார்க்க https://echallan.parivahan.gov.in இணையதளத்தையே பயன்படுத்துமாறு சைபர் குற்றப்பிரிவு போலீசார் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 16, 2025

கரூர்: விபத்தில் ஜோதிடர் பலி!

image

கரூர்: தோகைமலை அருகே உள்ள ஆத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாவி(70). கிளி ஜோதிடரான இவர் நேற்று முந்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பாளையம் – தோகைமலை சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக திருப்பதி என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 16, 2025

கரூர்: தேனீக்கள் கடித்து தொழிலாளி பலி!

image

கரூர்: நொய்யல் அருகே புங்கோடை குளத்துபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(58). விவசாயியான இவரது தோட்டத்தில் சக்திவேல் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், தோட்டத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள் அவர்களை கடித்தன. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சக்திவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News October 15, 2025

BREAKING: கரூர் தவெக செயலாளருக்கு ஜாமீன்

image

கரூர் தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் விசாரணை நடைபெறும் நிலையில், கரூர் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மேற்கு மாவட்ட செயலாளருக்கு ஜாமீன் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் கரூர் குற்றவியல் நீதிமன்றம் இன்று (அக்டோபர்.15) காவல் நீட்டிப்பு இல்லாமல் ஜாமின் வழங்க உத்தரவிட்டது.

News October 15, 2025

கரூர்: மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பயிற்சி

image

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதற்கு நாளை (16.10.2025) கடைசி நாள் ஆகும். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 15, 2025

கரூர்: பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி கூலி தொழிலாளி பலி

image

க.பரமத்தி அருகே மேலப்பாளையம் பகுதியில் சேகர் என்பவர் மது அருந்திவிட்டு அவரது மனைவியுடன் வாய் தகராறு ஏற்பட்டதில் நேற்று மனவிரக்தியில் இருந்த சேகர், பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

error: Content is protected !!