Karur

News November 5, 2025

கரூர்: டிகிரி போதும்! ரயில்வே துறையில் வேலை

image

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <>www.rrbchennai.gov.in<<>> என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.25,500 – ரூ.35400 வழங்கப்படும். கடைசி தேதி : 20.11.2025 ஆகும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News November 5, 2025

கரூர்: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

image

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண்னை தொடர்பு கொள்ளலாம் (அ) <>இந்த லிங்க்கில் <<>>சென்று தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 5, 2025

கரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க.

News November 5, 2025

கிருஷ்ணராயபுரம் இளைஞர் மர்ம மரணம்!

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் சண்முகம் (21). கூலி தொழிலாளியான இவர் நேற்று நண்பர்களுடன் சென்றபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு வீட்டில் வந்த சண்முகம் அதிகாலை பார்த்த போது இறந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த சம்பவ குறித்து குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலமைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2025

கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முக்கிய தினங்கள் 4 நவம்பர் முதல் 4 டிசம்பர் 2025 வரை பெயர் சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல் 9 டிசம்பர் முதல் ஜனவரி 8 2026 வரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் 9 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ தங்கள் இ.ஆ.ப தெரிவித்துள்ள செய்தி

News November 5, 2025

கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கொடூரம்!

image

கரூர் மாவத்தூர் ஊராட்சி குளக்காரன்பட்டியை சேர்ந்த 21 வயதுடைய கல்லூரி மாணவி அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ரஞ்சித் (25) காதலித்து வந்ததாக தெரிகிறது. ரஞ்சித்தின் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி காதலை முறித்துக் கொண்டார். ஆத்திரமடைந்த ரஞ்சித் தூங்கிக் கொண்டிருந்த மாணவி மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி உள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை. ரஞ்சித்தை பாலவிடுதி போலீசார் கைது செய்தனர்.

News November 4, 2025

கரூர்: 25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Production Assistant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 4, 2025

கரூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!

News November 4, 2025

கரூர்: BE போதும் ரூ.1.42 லட்சம் சம்பளம்!

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு BE முடித்து கேட் தேர்வை எழுதி தகுதி பெற்றிருக்க வேண்டும். ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க (ம) மேலும், விவரங்களை பார்க்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க நவ.16-ம் தேதி கடைசி ஆகும். BE முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!