Karur

News April 29, 2025

19 வயது இளைஞர் தற்கொலை: குளித்தலை அருகே சோகம்!

image

குளித்தலை அருகே மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் அனில்குமார்(19). இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை குளித்தலை அருகே செல்லாண்டியம்மன் கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 28, 2025

கரூர் காவல் நிலைய எண்கள்!

image

▶அனைத்து மகளிர் காவல் நிலையம், கரூர்: 04324-260505
▶காவல் நிலையம், அரவக்குறிச்சி: 04320-230026
▶காவல் நிலையம், கரூர்: 04324-217100
▶காவல் நிலையம், சிந்தாமணிப்பட்டி: 04323-251241
▶அனைத்து மகளிர் காவல் நிலையம், குளித்தலை: 04323-224200
▶காவல் நிலையம், க.பரமத்தி: 04324-283321
▶காவல் நிலையம், சின்னதாராபுரம்: 04324-232229
▶காவல் நிலையம், தென்னிலை: 04324-237227
நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 28, 2025

கோடை லீவுல செல்போன், ஐபிஎல்? ஜாக்கிரதை மக்களே!

image

கரூர்: கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் செல்போனிலும், இரவில் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் மூழ்கி உள்ளனர். இதனால் பார்வை குறைபாடு, ஞாபக மறதி, கவனச்சிதறல், படிப்பு மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பெற்றோர்கள் கண்காணித்து பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என கரூரை சேர்ந்த கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News April 28, 2025

கரூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

image

கரூர்: காட்டு முன்னூர் பகுதியில் உள்ள தங்கராஜ் தோட்டம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து க.பரமத்தி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மணிவேல் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 27, 2025

கரூர்: அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு!

image

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அமைச்சர் பதவியை தொடர்வதில் சிக்கல் எழுந்தது. இதனால் அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்த மதுவிலக்கு, ஆயத்தீர்வத்துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

கரூரில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு!

image

கரூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, கரூர் மாவட்டத்தின் சில இடங்களில், பரவலாக மழைபெய்தது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News April 27, 2025

கரூர் வட்டாட்சியர் எண்கள்

image

▶️வட்டாட்சியர், கரூர்: 9445000598
▶️வட்டாட்சியர், அரவக்குறிச்சி: 9445000599
▶️வட்டாட்சியர், குளித்தலை: 9445000600
▶️வட்டாட்சியர், கிருஷ்ணராயபுரம்: 9445000601
▶️வட்டாட்சியர், மண்மங்கலம்: 9445461817
▶️வட்டாட்சியர், கடவூர்: 9445461822
▶️வட்டாட்சியர், புகளூர்: 04324-270370
பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!

News April 27, 2025

கரூரில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை!

image

கரூர்: குளித்தலை அடுத்த மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம்(51). இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 26, 2025

கரூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

image

▶️ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்
▶️ வெண்ணெய்மலை முருகன் கோயில்
▶️ அரசு அருங்காட்சியகம், கரூர்
▶️ புகழிமலை, புகழூர்
▶️ பொன்னணியார் அணை
▶️ மாயனூர் கதவணை
▶️ அகஸ்தீஸ்வரர் கோயில், திருமுக்கூடலூர்
▶️ கடம்பவனேஸ்வரர் கோயில், குளித்தலை
கரூர் மக்களே SHARE பண்ணுங்க!

News April 26, 2025

கரூரில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் 

image

கரூர்: ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் வரும் 28ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை கரூர் எல்லைமேடு வெற்றி விநாயக மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இதில் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை உரிய ஆவணங்களுடன் தெரிவித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!