India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்

கரூர் வாங்கல் அருகே செம்மடை சாலையில், மணிகண்டன் (27) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் விஜயகுமார் ஓட்டி வந்த கனரக வாகனம் மணிகண்டன் மீது மோதியது. இதில் தலை நசுங்கி மணிகண்டன் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

கரூர் சம்பவத்திற்கு பிறகு த.வெ.க. செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து மீண்டும் தமிழகம் முழுவதும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கருத்துக்கணிப்பு முடிவில் கரூர் சம்பவத்தால் விஜய்க்கு செல்வாக்கு குறையவில்லை எனவும் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வு முடிவுகள் வைரலாக பரவி வருகிறது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேங்கடத்தான்பட்டி மகன் ஜெயக்குமார் (46) தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது குறித்து நங்கவரம் போலீசார் தகவல் பெற்றனர். அங்கு சென்று அதனை நிரூபித்து, ஜெயக்குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, இன்று கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பின்படி, தீபாவளி நாளில் காலை 6–7 மணி மற்றும் இரவு 7–8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி. அதிக ஒலி மற்றும் தொடர்ச்சியான சரவெடிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும், 15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

கரூர் வள்ளுவர் ஓட்டல் அருகே மணியம்மாள் (60) என்பவர் சாலையில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் ஷாஜகான் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், மணியம்மாள் என்பவர் மீது மோதியதில் தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக, கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் நேற்று ஷாஜகான் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கரூர் டு சின்ன தாராபுரம் சாலையில் அருக்காணி (85) என்ற முதியவர் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் படராம் ஓட்டி வந்த நான்கு சக்கர வாகனம் அருக்காணியின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் நேற்று படராம் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கரூரில் கடந்த செப்.27 அன்று நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில், கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் இன்று (அக்.16) திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர். மேலும் ஜாமீனில் வெளி வந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வரவேற்று கரூருக்கு அழைத்துச் சென்றனர்.
Sorry, no posts matched your criteria.