Karur

News March 9, 2025

கரூரில் தோழி விடுதிகள் அமைக்கப்படும் முதல்வர் அறிவிப்பு

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் நேற்று (மார்ச் 8) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கரூர், ஈரோடு, காஞ்சி, சிவகங்கை, தேனி, நாகை, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும் என்றார். இது கரூர் பெண்கள் மத்தியில் வரவேற்ப்பு பெற்றுள்ளது. ( Share பண்ணுங்க)

News March 8, 2025

புகழ் நிறைந்த புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

image

கரூர்,வேலாயுதம்பாளையத்தில் அமைந்துள்ளது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய திருக்கோயில்.இந்தக் கோயிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இங்கு வழிபட்டால், திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 8, 2025

ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

image

கரூரில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும். Share பண்ணுங்க.

News March 8, 2025

கரூரில் ஆந்திரா தம்பதியினர் உட்பட 3 பேர் கைது

image

கரூர் க.பரமத்தியை சேர்ந்தவர் வினோத்குமார் (30). இவர் நேற்று முன்தினம் சாலையில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1250 பணத்தினை பறித்து சென்றனர். விசாரணை மேற்கொண்டு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மனுபடி சாய் தேஜா (27), கம்மா சங்கரம்மா (25), பாலாஜி (19), ஆகிய மூன்று பேரை க.பரமத்தி போலீசார் நேற்று கைது செய்தனர்.

News March 8, 2025

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: 3 பேர் மீது வழக்கு

image

கரூர், கடவூர் தாலுக்கா தேவர்மலை ஊராட்சிக்கு உட்பட்ட சீத்தப்பட்டி மாரியம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு இளையராஜா, சதீஷ் குமார், அஸ்வின் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 7, 2025

வாழ்வை முன்னேற்றும் கல்யாண விகிர்தீஸ்வரர்

image

கரூர், வெஞ்சமாங்கூடலூர் என்ற ஊரில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில். 63 நாயன்மார்களில் சுந்தரர் நாயனாரால் பாடல் பெற்ற இந்தலத்தில் கருவறையில் மூலவரான கல்யாண விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இங்கு திருமண தோஷம், புத்திர தோஷம், பெண்களின் சாபம் போன்றவை நீங்க வேண்டிக் கொள்ளலாம்.இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 7, 2025

வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் ஆய்வு செய்தார். திட்டப் பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 7, 2025

வாழ்வை முன்னேற்றும் கல்யாண விகிர்தீஸ்வரர்

image

கரூர், வெஞ்சமாங்கூடலூர் என்ற ஊரில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில். 63 நாயன்மார்களில் சுந்தரர் நாயனாரால் பாடல் பெற்ற இந்தலத்தில் கருவறையில் மூலவரான கல்யாண விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இங்கு திருமண தோஷம், புத்திர தோஷம், பெண்களின் சாபம் போன்றவை நீங்க வேண்டிக் கொள்ளலாம்.இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 7, 2025

கரூரில் நாளை ரேஷன் குறைதீர் முகாம்

image

கரூர் மாவட்டத்தில் நாளை காலை10 மணி முதல் மதியம் 1மணி வரை ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது. அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News March 7, 2025

கரூரில் நாளை ரேஷன் குறைதீர் முகாம்

image

கரூர் மாவட்டத்தில் நாளை காலை10 மணி முதல் மதியம் 1மணி வரை ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது. அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!