India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர், இளைஞர்களுக்கு வேலை திறன்களை வளர்த்துகொள்ள PM Internship Scheme திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிற்பயிற்சி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் டிகிரி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இங்கே <
கரூர் கலெக்டர் அறிவிப்பு: தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் மார்ச்.15ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். கரூர் இளைஞர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிவிடாதீர்கள். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா 22. திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் கரூர் மாவட்டம் குள்ளப்பட்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத போது அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். க.பரமத்தி போலீசார் உடலை கைப்பற்றி இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர், குளித்தலை அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் அன்பழகி 51. இவர் லாலாபேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உள்ளார். கடந்த 5ம் தேதி அன்று வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு திறக்கப்பட்டுள்ளது. சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது சூட்கேசில் வைத்திருந்த 27 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது. குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு.
கரூரில் பட்டப்பகலில் அரசு கல்லூரி மாணவியை, மர்ம நபர்கள் ஆம்னி வேன் மூலம் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈசநத்தம் பகுதியை சேர்ந்த மாணவி, தனது தோழிகளுடன் நடந்து சென்றபோது காரில் கடத்தப்பட்டுள்ளார். சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலை காதல் விவகாரத்தில் மாணவி கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் பொது சுகாதாரத் துறை ஆய்வகத்தில் காலியாக உள்ள 126 ஆய்வக உதவியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்,வேதியியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.8,500 முதல் 21 ஆயிரம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே<
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர். மேலும், வெப்பத்தை தனிக்க மக்கள் இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளை நாடிச்செல்வதை காண முடிகிறது. இந்த நிலையில்,நேற்று கரூரில் இன்றும் அதிகபட்சமாக 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலை ரங்கமலை கணவாய் அருகே திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சேர்ந்த குடும்பம் வெள்ளகோவில் நாட்ராயன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது டயர் வெடித்ததில் கார் இடதுபுறம் இழுத்துச் சென்று பெட்ரோல் பங்க் அறிவிப்பு பலகையில் மோதி கீழே உருளாமல் நின்றது. இதனால் யாருக்கும் இந்த பாதிப்பும் இல்லை.
திண்டுக்கல் சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன் (50). பெயிண்டரான இவர் கடந்த 7ம் தேதி கரூர் மாவட்டம் பணிக்கம்பட்டி சந்தையில் 10அடி உயர சுவற்றில் தனியார் ஜவுளிக்கடை விளம்பரம் பெயிண்ட் செய்த போது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பெரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் தான் தோன்றிமலையில் அமைந்துள்ளது ‘தென் திருப்பதி’ என்று அழைக்கப்படும் அருள்மிகு கல்யாண வெங்கடரமணர் திருக்கோயில்.இக்கோயிலில் பெருமாள் பாறையில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு மனம் உருக வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம், திருமன பாக்கியம் மற்றும் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது நம்பிக்கை. இதை ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.