India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் காந்திகிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயலட்சுமி வித்யாலயா மாணவ, மாணவிகள் ஐசிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஸ்.சௌமியா 500-க்கு 477 மதிப்பெண்களையும், கே.சௌமியா – 476, பி.ஹர்சிகா 470, தனிஷ்கா 469 மதிப்பெண்களும் பெற்றனர். இதில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. மேலும் பள்ளியின் முதல்வர் கார்த்திகா லட்சுமி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்
கரூர் குளித்தலையில் உள்ள 65 ஆவது தேவாரப் பாடல் பெற்ற சிவதலம் கடம்பவனேசுவரர் கோயில் ஆகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 2ஆவது தலமான இதில் மூலவராக கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை உள்ளனர். புராணகாலத்தில் இவ்விடத்திற்கு குழித்தண்டலை என்ற பெயரும் உண்டு. இங்கு கடம்ப வனம் அதிகமிருந்ததாகவும் கூறுகின்றனர். இங்குள்ள முருகனுக்கு அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார்.
கடவூர் தாலுகா சின்னமநாயக்கன்பட்டி களம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரியா (14). இவர் வாழ்வார்மங்கலம் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயப்பிரியா காலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை. ஜெயப்பிரியா தாயார் இளஞ்சியம் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூர் வெங்கமேடு அரசி நகர் அருகே திட்ட சாலையைச் சேர்ந்தவர் தங்கராஜ்(37). இவர் சின்னகுளத்து பாளையம் டீக்கடை அருகே காரை நிறுத்தி இருந்துள்ளார். அப்போது திடீரென காரின் கதவை தங்கராஜ் திறந்த போது அவ்வழியே பைக்கில் வந்த சிவபிரகாஷ் கதவில் மோதி படுகாயம் அடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று கரூர் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளித்தலை திம்மாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (24). இவர் தனது பைக்கில் குறப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் சந்தோஷ் குமார் படுகாயம் அடைந்தார். திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சந்தோஷ் குமார் மனைவி மரகதவல்லி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு இரண்டாம் ஆண்டு பொது தேர்வில் 104 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 9086 தேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 41 பள்ளிகள் 100% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இதில் 08 அரசு பள்ளிகளும், 03 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 30 தனியார் பள்ளிகளும் அடங்கும் என கரூர் மாவட்ட கல்வி நிர்வாகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 94.31% லிருந்து 95.90% ஆக உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்டத்தில் ஆங்காங்கு நேற்று (மே.05) மழைப்பெய்தது. அதன் மழைப்பொழிவு விவரத்தை சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, மாயனூர் பகுதியில் 3 சென்டி மீட்டரும், தேக்கடியில் 2 சென்டி மீட்டரும், கடவூரில் 2 சென்டி மீட்டரும், கிருஷ்ணராயபுரத்தில் 1 சென்டி மீட்டரும் பதிவானது. நாளை தமிழகத்தில் ஆங்காங்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் கரூர் மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.