India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 58 தேர்வு மையங்களில் 11, 556 மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 463 பேர் என மொத்தம் 12 ஆயிரத்து 019 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்களாக 58 தலைமை ஆசிரியர்களும், 58 துறை அலுவலர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாக 935 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தனித்தனி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கவேல் தாந்தோணி கிழக்கு ஒன்றியம் பாகநத்தம், கொடையூர் வெடிக்காரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இன்று இரவு 7 மணியளவில் ஈடுபட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.
இன்று கரூரில் நம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக வேட்பு மனுவை ஆட்சியர் தங்கவேலிடம் வேட்பாளர் கருப்பையா வழங்கினார். இதில், மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் 25க்கும் மேற்பட்ட கார்களில் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் செந்தில்நாதன், தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் வேட்பு மனுவை வழங்கினார்கள். இதில் வேட்பு மனுவை சரிபார்த்து பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், பின்னர் உறுதிமொழி ஏற்பு நகலை பூர்த்தி செய்து தருமாறு வேட்பாளர் செந்தில்நாதனிடம் வழங்கினார்கள். உடன் கூட்டணி கட்சி (ம) கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கலை தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் வழங்கினார்கள். இதில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சின்னசாமி வேட்பாளர் தங்கவேல் கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) அதிமுக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சின்னதாராபுரம் அருகே உள்ள புஞ்சைகாளிக்குறிச்சியில் உள்ள உறியடி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் நேற்று பங்குனி மாத சனிக்கிழமையையொட்டி பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கரூரில் மருத்துவர் கருப்பையா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரூர், குளித்தலை அருகே இரணியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வளையப்பட்டியில் உள்ள 5-ஆவது வார்டு பகுதியில் பல நாட்களாக குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து பணிக்கம்பட்டி சந்தை நான்கு ரோடு பகுதியில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கரூர் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யாக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி தொடர்ந்து 2வது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் எல்.தங்கவேலை எதிர்த்து ஜோதிமணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.