India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்தியதாகக் கூறி ஆளுநரைக் கண்டித்தும், அதற்கு துணை போவதாகக் கூறி அதிமுக, பாஜகவை கண்டித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, கரூர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமையில், திமுக சார்பில் இன்று காலை 9.30 மணி அளவில், கரூர் தபால் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கரூர் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் 2025 அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (06/01/2025) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

”தமிழக சட்டமன்ற நிகழ்ச்சியின் முதலில் தமிழ்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவடையும் போது தேசியகீதமும் பாடப்படும் என்றுகூட தெரியாத ஆளுநருக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? ஒவ்வொரு முறையும் ஆளுநர் உரையைப் படிக்காமல் ஓடிப்போவது ஆளுநருக்கு தான் அவமானம். இதனால் தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் இழப்பு எதுவுமில்லை” என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

கீரனூர் ஊராட்சி குன்னுடையான் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 20 வயது பெண். திருச்சி தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிந்தநிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றி மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தோகைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்திப்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (58) என்பவர் வேலாயுதம்பாளையம் அருகே மேட்டுக்கடை பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் இருந்து நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டு அருகில் உள்ள கோழிப் பண்ணைக்கும் பரவியது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் 200க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின.

கரூர் கிழக்கு ஒன்றியம், நெரூர் தென்பாகம், அம்பேத்கர் நகர் கிளைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் மற்றும் நெரூர் வடபாகம், சின்ன காளிபாளையம் கிளைச் செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் 20 நபர்கள் அதிமுகவில் இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகத்தில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தேர்வைத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (06.01.2025) காலை 10.00 மணி அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 2025-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளார்கள். அத்தருணத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயாதீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இன்று இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட பாமக செயலாளர் பாஸ்கரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் தினமும் அனுமதியின்றி கிராவல் மண் திருடப்பட்டு வழக்கு பதியப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கிராவல் மண் திருட்டை தடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் மாவட்ட பா ம க சார்பில் நாளை கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட உள்ளது. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

கரூர் சட்டமன்ற தொகுதி, மண்மங்கலம் முதல் பண்டுதகாரன் புதூர் வரையில், பெரியவள்ளிபாளையம் – சின்னவள்ளிபாளையம் சாலையை, ரூபாய் 2.03 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.