Karur

News July 11, 2024

முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு

image

கரூா் ஆண்டாங்கோவில் பகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரான கவின் என்பவர் வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கரூா் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 10, 2024

கரூர் போலீசார் சவுக்கு சங்கரிடம் விசாரணை

image

கரூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (43).கரூர் டவுன் காவல் நிலையத்தில்,சென்னையை சேர்ந்த விக்னேஷ் 7 லட்சம் மோசடி செய்ததாக வந்த புகாரில் கைது செய்யப்பட விக்னேஷ்,சவுக்கு சங்கரின் இணையதளத்தில் வேலை பார்த்ததாகவும்,கிருஷ்ணனிடம் வாங்கிய பணத்தை சங்கரிடம் கொடுத்ததாக கூறினார்.நேற்று சவுக்கு சங்கரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.போலீசார் நான்கு நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது

News July 7, 2024

M.R.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை: போலீசார் குவிப்பு

image

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில், அவருக்கு சொந்தமான வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் சிபிசிஜடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் வீட்டில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சோதனையை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News July 7, 2024

சிக்கலில் கரூர் மாஜி அமைச்சர்..!

image

நிலமோசடி தொடர்பாக அ.தி.மு.க மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2வது முறையாக முன்ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News July 6, 2024

நீதிமன்றத்தில் வீடியோ எடுத்த நபர் கைது

image

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தை செல்போன் மூலம் வீடியோ எடுத்த தமிழினியன் என்ற இளைஞர் லைவாக வீடியோ அனுப்பி கொண்டிருந்ததை கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழினியனை பிடித்து மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் முன்பு ஆஜர் படுத்தினர்.

News July 5, 2024

குரூப்.1 தேர்வை 2,850 பேர் எழுதுகின்றனர்

image

குரூப்.1 தேர்வில் காலியாகவுள்ள 90 துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்களுக்கு விண்ணப்பிக்க மார்ச்.28 இல் அறிவிப்பு வெளியானது. கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையத்தால் நடத்தப்படும் குரூப்.1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு ஜூலை.13 இல் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 11 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 2,850 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

News July 5, 2024

சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை

image

ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக யுவராஜ்.செல்வராஜ், ரகு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 13 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.இதில் கரூர் தாளப்பட்டியில் உள்ள யுவராஜ், தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் 1 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News July 4, 2024

முன்னாள் அமைச்சர் ஜாமீன் மனு; நாளை ஒத்திவைப்பு

image

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இடைக்கால முன்ஜாமீன் மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் இடைக்கால முன்ஜாமீன் மனு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் நாளை ஒத்திவைத்துள்ளார்.

News July 4, 2024

கரூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் இரவு 8.30 வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 4, 2024

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கிற்கு இன்று தீர்ப்பு

image

கரூா் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை அருகிலிருந்து கவனிக்க முன்பிணை கோரி கரூர் கோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக கோர்ட் அறிவித்துள்ளது.

error: Content is protected !!