India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2024 ல் மதுவிலக்கு, போதைப்பொருள், குற்ற சம்பவம், சட்டம் ஒழுங்கு, மணல் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 45 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 519 பள்ளிகள், 45 கல்லூரிகள் என 1789 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இத்தகவலை கரூர் எஸ்.பி பெரோஸ் கான் அப்துல் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சிறப்பு சிறார் காவலர் என்ற 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு ரூ.18,536 முதல் ரூ.27,804 வரை தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04324 296056 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

கரூர் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரை அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லாவிடம் திராவிட கழகம் சார்பில் புகார் மனு வழங்கப்பட்டது. உடன் கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் குமாரசாமி, மாவட்டச் செயலாளர் காளிமுத்து, மாவட்டக் காப்பாளர் வே. ராஜு, மாநில இளைஞரணி துணை செயலாளர் ம. ஜெகநாதன், அலெக்ஸ் ஆகியோர் இருந்தனர்.

கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எம்.கே.பாஸ்கர் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசை சந்தித்தார். அப்போது ராமதாஸுக்கு தைப்பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்தார். உடன் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட தலைவர் தமிழ்மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.மாணிக்கம் கலைஞர் நினைவு அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட்டார். கருணாநிதி வாழ்க்கை வரலாறு மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தான புகைப்படங்களை பார்த்து ரசித்தார். கருணாநிதி வெற்றி பெற்ற முதல் சட்டமன்ற தொகுதி குளித்தலை தொகுதி.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பன் (65). இவர் தனது மகளின் திருமணத்திற்காக கூட்டுறவு சேமிப்பு கணக்கில் இருந்த பணத்தையும், தோகைமலையில் ஐஓபி வங்கியில் நகைகளின் அடகு வைத்த பணம் என மொத்தம் ரூ.1,95,000 பணத்தை மஞ்சள் பையில் தோகைமலை பஸ் ஸ்டாண்டில் வைத்திருந்த போது யாரோ திருடிச் சென்றுவிட்டனர். புகாரின்பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

மாயனூர் கதவணைக்கு இன்றைய நிலவரப்படி 10076 கனஅடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 9426 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 200 கன அடி நீரும், கட்டளைமேட்டு வாய்க்காலில் 350 கன அடி நீரும், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 100 கன அடி நீரும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் சணப்பிரட்டி ரயில் நிலையம் அருகே கடந்த 15 நாட்களுக்கு மேலாக சவுடு மண், மணல் கடத்தப்பட்டு வரும் லாரிகளை நேற்று (ஜன.8) மடக்கிப் பிடிக்கும் போராட்டம் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. அதன்படி அவ்வழியே மணல் கடத்தி வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி லாரியை பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கரூர் மாவட்டத்தில் நாளை (09.01.2025) காலை 10.00 மணி அளவில், கரூர் மாநகராட்சி ஆட்சி மங்கலம் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைக்க உள்ளார். இதில் வட்ட அலுவலர் அவர்களும் அரசு அதிகாரியும் கலந்து கொள்ள உள்ளனர் .

கரூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் காளையின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் அதன் விவரங்களை நிகழ்ச்சிக்கு முன்னர், www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.