India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு செய்திதாள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஐந்து பேருக்கு காகிதக்கூழ் பட்டயப்படிப்பு இலவசமாக வழங்கபடுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள், விண்ணப்பப் படிவங்களை கரூர் புகழூர், திருச்சி மொண்டிப்பட்டி ஆலைகளின் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூன் 10-க்குள் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று(மே 17) மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புகழூர் நகராட்சி அலுவலகம் முன் வாங்கல் வட்டார பொது சுகாதாரத்துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார். பொறியாளர் மலர்கொடி முன்னிலை வகித்தார். வாங்கல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் வரவேற்றார். ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் பொன்ராஜ் கலந்துகொண்டு, டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு விளக்க உரையாற்றினார்.
கரூர் அரசு வேலைவாய்ப்பு, தொழிற் பயிற்சி நிலையத்திற்கு சேர்க்கைக்கு நடைபெறுகிறது. இந்த https://skilltraining. tn. gov. in/DET/ எனற இணைய தளம் வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பங்கள் கடைசி நாள் (07.06.24). மேலும் கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை (04324-222111, 9499055711) என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாக & நேரில் தொடர்பு கொள்ள என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு கரூர் மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கரூரில் அமைந்துள்ளது சோதிவடிமான அய்யர் மலை. இந்த மலைமீது இரத்னகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. புராணக்கதைகளைக் கொண்ட இத்தலத்தில் அப்பர் பாடல் பாடியுள்ளார். தேவாரத்தில் சோழநாட்டு காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவதலமாக இது உள்ளது. இத்தலத்தின் சிவனின் முன்பு பொயுவாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது. 1140 படிகளுடன் இக்கோவில் மலை மீது அமைந்துள்ளது.
அரவக்குறிச்சி, தடாகோவில் அருகே நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமாரின் குடும்பத்தினர் நேற்று(மே 15) ராமேஸ்வரம் சென்று திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த பெயர் பலகை மீது மோதியது. இதில் துரைசாமி(74), ஷாலினி(33) ஆகியோர் சம்பவ இடத்திலே இறந்தனர். காயமடைந்த 17 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூரில் சட்டவிரோத கந்துவட்டி வசூல் செய்தால், அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார். இதில், முறையாக பைனான்ஸ் தொழில் விதிமுறைகளை பின்பற்றாமல் மக்களுக்கு அதிக பணம் கொடுத்து வசூல் செய்து துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
கரூர் சமத்துவபுரம் காந்தி நகரை சேர்ந்த சுகுமார் (44) நேற்று முன்தினம் லாரி மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரூர் மாவடியான் கோவில் தெருவில் வசித்து வரும் திருநங்கைகள் சுகுமாரிடம் பணம் கேட்டு தர மறுத்ததால் திருநங்கைகளும் சுகுமாரை தகாத வார்த்தை பேசி, மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து டவுன் போலீஸார் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவினங்கள் குறைக்கிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் வாயிலாக 5,090 பேருக்கு ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.