Karur

News January 24, 2025

தவெக கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

image

தவெக வில் குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் தனி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர். அதில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பாலசுப்பிரமணி, மாவட்ட இணை செயலாளராக சதாசிவம், பொருளாளர் வினோத், துணை செயலாளர்கள் கபில், தர்ஷினி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

News January 24, 2025

கரூர் மாவட்ட செயலாளரை அறிவித்த விஜய்

image

தவெக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு கரூர்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கரூர் மேற்கு மாவட்ட கழகத்திற்கு வி.பி.மதியழகன் மாவட்ட கழக செயலாளராக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இணை செயலாளராக விக்னேஸ்வரன், பொருளாளராக ஆறுமுகம், துணை செயலாளராக சசிகாந்தன்,ஜெயலட்சுமி மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்களையும் நியமித்து அவரது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

கரூர் அரசு அருங்காட்சியகம் ஓர் அலசல்

image

அரசு அருங்காட்சியகம் கரூரில் பழைய திண்டுக்கல் ரோட்டில் ஜவஹர் பஜாரில் அமைந்துள்ளது. இது மக்களின் பார்வைக்காக 2000 ஆண்டில் துவங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இங்கு வெண்கல சிலைகள், உலோக பொருட்கள், இசைக்கருவிகள், நாணயங்கள், பாறைகள் மற்றும் தாதுக்கள் உட்பட மாதிரிகள் பல உள்ளன. மேலும் படிமங்கள், தாவரவியல் மாதிரிகள், மெல்லுடலிகளின் ஓடுகள் மற்றும் பிற கடல் மாதிரிகள் ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

News January 24, 2025

கரூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைவு

image

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம், திமுக திருமலைநாதன்பட்டி கிளைச் செயலாளர் மதன் குமார், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிவகுமார், சண்முகராஜா, ராஜ்குமார் கிருஷ்ணரெட்டியூர் திமுக கிளைச் செயலாளர் மணிவேல் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News January 24, 2025

கரூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

image

கரூர் துணை நிலையம் பராமரிப்புப்பணி காரணமாக நாளை (25/01/2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராமானுஜம் நகர் தெற்கு, அண்ணா நகர், எல்பிஜி நகர், மதுரை பைபாஸ், சின்னாண்டங்கோவில், மகாத்மா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கரூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் கனிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

மக்களுடன் முதல்வர் திட்டம்: அமைச்சர் பங்கேற்பு

image

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் இன்று மக்களுடன் முதல்வர் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி பில்லாபாளையம், மாவத்தூர், பால விடுதி, சந்துவார் பட்டி, கடவூர், ஆகிய பகுதிகளில் காலை 10.00 மணி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார்.

News January 24, 2025

அனுமதியின்றி கருச்சிதைவு மாத்திரை விற்பனை: வலைவீச்சு

image

தோகைமலை நாகனூரைச் சேர்ந்த கனகவல்லி வயிற்று வலியால் திருச்சியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் டாக்டரின் ஆலோசனையின்றி கருச்சிதைவு மாத்திரை வழங்கப்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டது தெரியவந்தது. மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ததில், மருந்து கடை பணியாளர்கள் அனுமதியின்றி கருச்சிதைவு மாத்திரை வழங்கியது தெரியவந்தது. தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து மாத்திரை வழங்கியோரை தேடிவருகின்றனர்.

News January 24, 2025

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை

image

கரூர் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.24) காய்கறி விலை நிலவரம்: தக்காளி ரூ.24, கத்தரி ரூ.20, வெங்காயம் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.40, இஞ்சி ரூ.50, சுரைக்காய் ரூ.15, வெண்டை ரூ.40, பச்சை அவரை ரூ.50, பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.60, புடலங்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.50, முள்ளங்கி ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.40, புதினா ரூ.60, கொத்தமல்லி ரூ.40, கருவேப்பிலை ரூ.100-க்கு விற்பனை ஆகிறது.

News January 24, 2025

வழக்குகளை கண்டு அஞ்ச மாட்டோம்: முன்னாள் அமைச்சர்

image

புகழுரை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக Ex அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,  கரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டு அதிமுகவினர் அஞ்சமாட்டோம் என்றார். புகழூர் கதவணை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திறக்கப்படும் என தெரிவித்தார்.

News January 23, 2025

“நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடு” போஸ்டரால் பரபரப்பு

image

குளித்தலை கடம்பவனீஸ்வரர் கோவில் சுற்றி தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சாலை அமைத்திட வேண்டுமென கடம்பர் கோவில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் குளித்தலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

error: Content is protected !!