Karur

News May 16, 2024

அரவக்குறிச்சி அருகே வேன் விபத்தில் இருவர் பலி

image

அரவக்குறிச்சி, தடாகோவில் அருகே நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமாரின் குடும்பத்தினர் நேற்று(மே 15) ராமேஸ்வரம் சென்று திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த பெயர் பலகை மீது மோதியது. இதில் துரைசாமி(74), ஷாலினி(33) ஆகியோர் சம்பவ இடத்திலே இறந்தனர். காயமடைந்த 17 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 15, 2024

கரூரில் கந்து வட்டி கொடுத்தால் குண்டர் சட்டம் பாயும்

image

கரூரில் சட்டவிரோத கந்துவட்டி வசூல் செய்தால், அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார். இதில், முறையாக பைனான்ஸ் தொழில் விதிமுறைகளை பின்பற்றாமல் மக்களுக்கு அதிக பணம் கொடுத்து வசூல் செய்து துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

News May 15, 2024

கரூரில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த திருநங்கைகள் 

image

கரூர் சமத்துவபுரம் காந்தி நகரை சேர்ந்த சுகுமார் (44) நேற்று முன்தினம் லாரி மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரூர் மாவடியான் கோவில் தெருவில் வசித்து வரும் திருநங்கைகள் சுகுமாரிடம் பணம் கேட்டு தர மறுத்ததால் திருநங்கைகளும் சுகுமாரை தகாத வார்த்தை பேசி, மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து டவுன் போலீஸார் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 15, 2024

கரூரில் காப்போம் திட்டம் – 5 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

image

தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவினங்கள் குறைக்கிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் வாயிலாக 5,090 பேருக்கு ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

அனுமதி தரக்கூடாது – கரூர் எஸ்.பி உத்தரவு

image

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 92 தனியார் பள்ளிகளில் இயங்கி வரும் 702 பேருந்துகளில் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ள 556 பேருந்துகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்யப்பட்டன. கரூரில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்த ஆய்வின்போது ஓட்டுனர் வருகை இல்லாத, முதலுதவி பெட்டியை சரியாக பயன்பாட்டில் வைக்காத பேருந்துகளுக்கு அனுமதி தரக்கூடாது என எஸ்.பி பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

News May 14, 2024

தனியார் ஹோட்டலில் கேஸ் சிலிண்டரில் கசிவு

image

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மட வளாகம் பகுதியில் செயல்படும் தனியார் ஹோட்டலில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கடை உரிமையாளர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சிலிண்டரை வெளியே எடுத்து வைத்து தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர். இதனால் பெரிய அளவில் விபத்து ஏற்பட இருந்தது தவிர்க்கப்பட்டது.

News May 14, 2024

கரூர் அருகே விபத்து

image

கரூர் திருக்காட்டுத்துறையை சேர்ந்தவர் சிவகுமார் 30. இவர் கடந்த மே 11ம் தேதி தனது எலக்ட்ரிக் பைக்கில் கரூர் சேலம் சாலையில் வந்துள்ளார். அப்போது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் ஒட்டி வந்த ஈச்சர் சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர். 

News May 14, 2024

அரசு பள்ளியில் பூட்டை உடைத்து திருட்டு

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் தொழில்நுட்பம் ஆய்வகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 லேப்டாப், இண்டக்சன் ஸ்டவ், ஸ்பீக்கர், போன் உள்ளிட்ட ரூ.75865 மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் திருடு போனது. பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News May 14, 2024

கரூர்: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 17 ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கரூர் மாவட்டம் 17 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 87.48% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.48 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.37 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT: கரூரில் 92.28% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி கரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 88.80% பேரும், மாணவியர் 95.33% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.28% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!