Karur

News May 22, 2024

செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது

image

கரூர் மின்னாம்பள்ளி, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகேசன் ( 47) இவர் 19ஆம் தேதி சர்ச் கார்னர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் முருகேசனின் செல்போனை திருடி சென்றனர். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்போனை திருடிய வெங்கமேட்டை சேர்ந்த ஜீவானந்தம்(21), விக்னேஸ்வரன் (21) இருவரை கைது செய்தனர்.

News May 21, 2024

கரூரில் 13 செ.மீ மழைப்பதிவு

image

கரூர் மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூர் நகர்பகுதியில் 13 செ.மீட்டரும், பஞ்சம்பட்டி பகுதியில் 10 செ.மீட்டரும், குளித்தலை, கடவூர் ஆகிய பகுதிகளில் 6 செ.மீட்டரும் மாயனூரில் 5 செ.மீட்டரும் மயிலம்பட்டியில் 3செ.மீட்டரும் அரவக்குறிச்சி, தோகைமலை ஆகிய பகுதிகளில் 2செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 21, 2024

மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி எம்எல்ஏ ஆய்வு

image

வெள்ளியணை, உப்பிடமங்கலம், ஜெகதாபி பகுதிகளில் மழை நீர் ஊருக்குள் புகுந்ததால், காலை மதியம் மாலை ஆகிய மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழைநீர் வடியும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மழைநீர் வடியும் வரை வெள்ளியணை லட்சுமி மண்டபம், உப்பிடமங்கலம் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் உணவு வழங்கப்படுவதை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பார்வையிட்டார்.

News May 21, 2024

குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

image

அரவக்குறிச்சியிலிருந்து பழனி செல்லும் சாலையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் விபத்துகள் நேரிட்டு வருகின்றன. எனவே, குழாய் பதிக்கும் பணியை பள்ளிகள் திறக்கும் முன்பு விரைந்து முடிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

News May 20, 2024

உங்கள் பகுதியில் மழை பாதிப்பா உடனே தொடர்பு கொள்ளவும்

image

கரூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் 24 மணி நேரம் செயல்படும் தகவல் கட்டுப்பாட்டு அறை இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04324 246306 எண்களுக்கு தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 20, 2024

கரூர்: 9 ஆண்டுக்குப் பிறகு நடந்த வினோத நிகழ்ச்சி

image

கரூரை அடுத்த நெரூரில் பக்தர்கள் எச்சில் இலையில் அங்க பிரதட்சணம் செய்வது 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தது. ஆனால், 2015ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதித்து. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற கிளை தடையை நீக்கியது. இந்நிலையில், நெரூர் சித்தர் சதாசிவ பிரம்மேந்திராள் கோயிலில், பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வினோத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

News May 20, 2024

காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், தெரசாநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் சபரீஸ்வரன் (16) இவர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இதில் நேற்று அவரது பள்ளி நண்பர்கள் 4பேருடன் நெரூர் காவிரி ஆற்றில் குளித்த போது, சபரீஸ்வரன் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 20, 2024

கரூரில் புதுமைப் பெண் திட்டத்தில் 5, 446 பேர் பயன்

image

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த முதல்வர், புதுமைப்பெண் திட்டம் எனும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேர்ந்த 2.73 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு, மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் 5, 446 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

News May 19, 2024

கரூர் அருகே விபத்து: பலர் காயம்

image

மே 18ம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில், தண்ணீர் பந்தல் பிரிவு அருகே இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சசிகுமார், மகிழன், அனீஸ், ரிதுன்  ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில், க.பரமத்தி காவல்துறையினர் காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 19, 2024

தென்கொரியா நபருக்கு தமிழ் முறைப்படி திருமணம்

image

கரூர் அடுத்த கோம்பு பாளையம் பெருமாள் கோவிலில், நடையனூர் பகுதியைச் சார்ந்த விஜயலட்சுமி, தென் கொரியா நாடு டோங்யோங் சார்ந்த, மின்ஜுன்கிம் என்ற நபரும், ஆன்லைன் மூலமாக ஒரு வருட காலம் காதலித்து வந்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன், இன்று தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்தைக் காண அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தென் கொரியா நாட்டைச் சேர்ந்த நபரை பார்த்து சென்றனர்.

error: Content is protected !!