Karur

News July 29, 2024

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 513 மனுக்கள்

image

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 29) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொண்டார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிக் கடன், இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவை கேட்டு மொத்தம் 513 மனுக்கள் பெறப்பட்டன.

News July 29, 2024

கரூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் க.பரமத்தி வட்டாரத்திற்குட்பட்ட தொக்குப்பட்டி, இராஜாபுரம், சூடாமணி ஆகிய ஊராட்சிகளுக்கு நாளை (ஜூலை 30) எல்லைமேடு VKD திருமண மண்டபத்திலும், கடவூர் வட்டாரத்திற்குட்பட்ட பாப்பயம்பாடி, வடவம்பாடி, கீரனுார் ஆகிய ஊராட்சிகளுக்கு வேலாயுதம்பாளையத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்திலும், கிருஷ்ணராயபுரம் தொகுதியிலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News July 29, 2024

கரூர் மாவட்ட ஆட்சியர் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

image

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று நள்ளிரவு 12.00 மணியளவில் 109.2 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், மேட்டூர் அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விட உள்ளதால், காவிரி கரையோர பகுதிகளில் உள்ள சிறுவர்கள் இளைஞர்கள், பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பது, மீன் பிடிப்பது, புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என கரூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

News July 28, 2024

கரூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

image

கரூர் மாவட்டம் புன்செய் புகழூர் வட்டத்திற்கு உட்பட்ட தவிட்டுப்பாளையம் மற்றும் புன்செய் புகழூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் வரும் தடுப்பணை பகுதியில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், காவிரி ஆற்று பகுதியில் நீர்வரத்து அதிகரிப்பு – ஆடி 18 அன்று பொதுமக்கள் அதிகமாக காவிரி ஆற்று பகுதியில் கூடும் இடங்களில் பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார்.

News July 28, 2024

கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

image

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு சுமார் 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி காவேரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. காவிரி கரையோரம் பொதுமக்கள் குளிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, நீச்சல் உள்ளிட்ட எவ்வித செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என கரூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News July 28, 2024

கர்ப்பிணிகள் அரசு நிதி உதவி பெற கலெக்டர் அறிவிப்பு

image

கரூர் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு நிதி உதவி பெற கணினியில் சுயமாக பதிவு செய்து நிரந்தர தாய், சேய் அடையாள அட்டை பெறலாம், இதற்காக தாய்மார்கள் தங்கள் செல்போன் அல்லது கணினி மூலம் http://picme.tn.gov.in/picme என்று இணைய தளத்தில் சென்று சுய உதவி என்ற கட்டத்தை அழுத்தி ஆதார் அட்டை, கர்ப்பம் உறுதி செய்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிரந்தர தாய் சேய் அடையாள அட்டை பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

திமுக பிரமுகர் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

image

தமிழக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குளித்தலை நகராட்சி வார்டு கழகச் செயலாளரும், 16வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ஏ.சுரேஷ் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்பதை அறிந்து வருந்தினேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News July 28, 2024

கரூரில் கிடுகிடுவென விலை உயர்வு

image

கரூர் மாவட்டம் நொய்யல், சேமங்கி, குளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. ஆடி மாதம் என்பதால் கடந்த வாரம் 30 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம் 1 சிப்பம் ரூ.1,250 முதல் ரூ.1,350 வரையிலும், அச்சு வெல்லம் ரூ.1,300 முதல் ரூ.1,330 வரை விலை போனது. தற்போது உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,450, அச்சு வெல்லம் ரூ.1,400 வரை விற்பனையானது.

News July 28, 2024

50,000 லிட்டர் கொள்ளளவில் நவீன பால் பண்ணை

image

கரூர் மாவட்டத்தில் 144 பிரதான பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு நாளுக்கு சராசரியாக, 17,025 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதையடுத்து ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில், புதிய பால் பண்ணை அமைத்திட ரூ.3.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அதன் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நவீன பால் பண்ணை திறப்பதற்கு தயாராக உள்ளதென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு.

image

கரூர் தோரணக்கல்பட்டியில் இன்று ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 3.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நவீன பால் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆவின் துணை பதிவாளர் மற்றும் துணை பொது மேலாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!