India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. ஆங்கில தேர்வான இன்று கரூர் மாவட்ட முழுவதும் 45 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 9,954 மாணவ, மாணவிகள், தனிதேர்வர்கள் 47 பேர் என 10,001 பேர் தேர்வு எழுதினர். பள்ளி கல்வித்துறை சார்பில் நிலையான மற்றும் பறக்கும் படையினர் 112 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. கரூர் மாவட்டத்தில் 10526 மாணவ மாணவிகள் தனித் தேர்வுகள் 187 பேர் என தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட முழுவதும் 45 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 10347 மாணவ, மாணவிகள், தனிதேர்வர்கள் 110 பேர் தேர்வு எழுதினர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிலையான மற்றும் பறக்குபடை என 112 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் ஆதரவாளர்களான அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ். சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் சுப்பிரமணி வீடுகளில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்களுடன் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகின்றது.

கரூர் மாவட்டத்தில், நாளை (மார்ச் 7) முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் விவசாய கூலி வேலை செய்பவர்கள் மற்றும் அவர்களது மகன், மகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து அலுவலகங்களிலும் நாளை (7ம் தேதி) காலை 10மணி முதல் மாலை, 5 மணி வரை முகாமில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பதிநகரில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மோகன பிரியா மற்றும் அவரது 2 குழந்தைகள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து, கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான அவரது கணவர் பிரேம்ராஜ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் அறிவிப்பின் படி முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகைக்கான மனு அளிக்கலாம். அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 07.03.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிவரை நடைபெறும். உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், மாணவ மாணவியர் தாங்கள் பயிலும் கல்லூரி சான்று ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும்.

கரூரில் மிகவும் சுவையான தின்பண்டம் என்றால் அது வெள்ளியணை அதிரசம்தான் என்கிறார்கள். குறிப்பாக வெள்ளியணைக்கு சென்றால் கடைகளில் நாம் பார்க்கக்கூடியது அதிரசம்தான். அச்சு வெல்லம், காவிரி தண்ணீர் பயன்படுத்திச் செய்யப்படும் இந்த அதிரசத்திற்கென்றே தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இதே போல் கரூரில் வேறு என்ன சிறப்பான உணவு உள்ளது என்று கமெண்ட் பண்ணுங்க மக்களே.

கரூர், மண்மங்கலம், ஆத்தூர் வீரசோளிபாளையத்தில் மகாசோளியம்மன், மகாமுத்துசாமி கோயில் கும்பாபிஷேகம் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. முன்னாதாக இன்று கணபதி ஹோமம், வருகிற 7-ந்தேதி 48 புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அதனை தொடர்து 10-ந்தேதி ஆறாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அன்றைய தினம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) 750 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகையாக ரூ.15,000 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே<

கரூர் அருகே செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (71). இவர் ஈரோடு சாலையில் உள்ள தனியார் சிமெண்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறார். நேற்று அங்கு வேலை பார்க்கும் அசாம் மாநிலத்தை சேர்ந்த சாகர் குமார் (20), தகராறு செய்து பழனியப்பனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். கரூர் டவுன் போலீசார் அவரை கைது செய்து நேற்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.