Karur

News September 5, 2024

கரூர் மாவட்டத்தில் 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

image

முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை முன்னிட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வி பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. இதன்படி, கரூர் மாவட்டத்திற்கு, தொடக்க, நடுநிலை பள்ளிக்கு 3, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கு 3, மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனம் சார்ந்து 2, தனியார் பள்ளி சார்பில் 1 என 9 பேர் தேர்வு செயய்யப்பட்டுள்ளனர்.

News September 4, 2024

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக கரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC-2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

கரூரில் தேசிய ஊட்டச்சத்து வார விழா

image

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார். அருகில் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் வேளாண்மை துறையினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News September 4, 2024

கரூர் அருகே அட்டகாசம்: 4 பேர் கைது

image

வயலூரை சேர்ந்தவர் பாலமுத்து 64. இவர் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தனது நிலத்தில் ஆடு மாடுகளை மேய்த்து கொண்டிருந்த போது அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தி 50, சந்துரு 23, சஞ்சய் 20, நந்தகுமார் 21 ஆகியோர் கிணற்று தண்ணீர் பாய்ச்ச விடமாட்டாயா எனக்கூறி ஒயர்களை அறுத்து மீட்டர் பெட்டியை கிணற்றில் வீசியுள்ளனர். இதுகுறித்து எஸ்பியிடம் அளித்த புகாரின் பேரில் நேற்று லாலாபேட்டை போலீசார் வழக்குபதிந்துள்ளனர். 

News September 4, 2024

கரூர்: 9 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

image

2024ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு கரூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்விப் பிரிவில் குளித்தலை ஒன்றியம் சிவாயம் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ம.ரமேஷ், தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் சு.மனோகர் உட்பட 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News September 3, 2024

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்?

image

கரூர் மாவட்டத்தில் Way2News நிருபராக மாற விருப்பமும், ஆர்வமும் உள்ளதா? உங்கள் பகுதிகளில் பகுதிகளில் நடக்கும் தினசரி நிகழ்வுகளை செய்திகளாக பதிவிட்டு கூடுதல் வருவாய் ஈட்டுங்கள். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் உரிய ரூபாய் வழங்கப்படும். உங்கள் ஊரின் நிருபராக மாறுங்கள் கூடுதல் வருவாய் ஈட்டுங்கள்! இப்போதே நிருபராக பதிவு செய்யவும். தொடர்புக்கு 91603 22122

News September 3, 2024

கரூர்: மூடப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி மீண்டும் திறப்பு

image

கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் நெடுங்கூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கடாபுரம் ஆகிய 2 தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களே இல்லாததால் மூடப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து இந்த பிள்ளைகளை மீண்டும் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, வெங்கடாபுரம் தொடக்கப்பள்ளி நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அந்த பள்ளி 2 ஆசிரியர்கள், 3 மாணவர்களுடன் செயல்பட தொடங்கியுள்ளது.

News September 3, 2024

கரூரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் கந்துவட்டி கொடுமை வழக்கில் தொடர்புடைய எதிரியை இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதில் பொதுமக்களிடம் கந்து வட்டி, மீட்டர் வட்டி மற்றும் அதிகமான வட்டிக்கும் பணம் கொடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

News September 2, 2024

எஸ்பி அபிஸில் காணாமல் போன செல்போன்கள் ஒப்படைப்பு

image

நாளை 03.09.2024, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூபாய் 52,00,000 மதிப்புள்ள 211 செல் போன்கள் மற்றும் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் இழந்த ரூபாய் 67,00,000/- மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து கொடுக்க உள்ளார். இது குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

News September 2, 2024

கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நீரில் மூழ்கி இறந்த நபர்களின் வாரிசு தாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து காசோலையை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தனித் துணை ஆட்சியர் பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!