India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர்:சின்ன வேப்பநத்தத்தை சேர்ந்தவர் விக்ரம் (25). இவர் கரூர் ஆட்டோ வொர்க் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது நண்பர் திருமணத்திற்கு வலையர் பாளையம் சென்றுள்ளார். அதன்பிறகு அங்குள்ள கட்டளை மேட்டு வாய்க்காலில் குளித்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூர்: வெங்கமேடு என்எஸ்கே நகரை சேர்ந்தவர் முருகன் (54). இவரிடம், அவரது மகன் சுகேஷ் (27) பணம் கேட்டுள்ளார். ஆனால், முருகன் பணம் தர மறுத்ததால் சுகேஷ் கூர்மையான ஆயுதம் மூலம் தந்தையை தாக்கியுள்ளார். இதில் நெஞ்சில் படுகாயமடைந்த முருகன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, சுகேஷை வெங்கமேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.
குளித்தலை போக்குவரத்து போலீசார் கூறுகையில் “கடந்த மாதம் குடிபோதையில் வாகனம் ஒட்டியது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, செல்போன் பேசியபடி வாகனம் ஒட்டியது, அதிவேகமாக வாகனம் ஒட்டியது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகன நிறுத்தம், சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 1,843 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.21 லட்சத்து 4,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதில் பசுபதீஸ்வரர் கோயில், சின்னதாராபுரம், தென்னிலை, வேலாயுதம்பாளையம், தாந்தோணி வெங்கமேடு, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட பூஜைகள் நடைபெற்றது. மேலும் இன்று சுமார் 300 மேற்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்துக் கொண்டு வேலாயுதம்பாளையம் ஆற்றில் கரைக்க போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்றனர்.
குளித்தலை அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தனியார் நிறுவன செக்யூரிட்டியான கார்த்திக். இவர், நேற்று டூவீலரில் லாலாப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். லாலாப்பேட்டை போலீசார், கார்த்திக் உடலை மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் குளித்தலை போலீசில் சரணடைந்தார்.
கரூர் மாவட்டம் லாலாபேட்டை கருப்பத்தூரில் பெட்டவாய்த்தலை அருகே பொய்யாமணி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (33). அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டார். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பொதுமக்கள் மேல் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட 4 தொகுதிகளை சேர்த்து இந்து முன்னணி சார்பில் 100க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டன. மேலும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் சேர்ந்து 300 சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தின் காலநிலை மாற்ற இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு பணிசெய்யும் பொருட்டு ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கரூர் வனக்கோட்டம், கதவு எண்: 44, பூங்கா நகர் பிரதான சாலை, தான்தோன்றிமலை, கரூர்-639005 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்மென மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள கரூரை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (www.sdat.tn.gov.in) இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சி நல அலுவலராக பணிபுரிந்து வருபவர் லட்சிய வர்ணா அவரது பெயரில் போலி பேஸ்புக் , வாட்ஸ் அப் கணக்குகள் துவங்கி நண்பர்களிடம் பண உதவி கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என தகவல் கிடைத்தது. இதையடுத்து தனது பெயரில் போலியான கணக்குகள் துவங்கிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று சைபர் கிரைமில் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார். இதை அனைவருக்கும் share செய்யவும்.
Sorry, no posts matched your criteria.