India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த மழையானது மொத்தம் 72.60 மில்லி மீட்டர் பெய்ததாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இதில் அதிகபட்ச மழை பொழிவாக கிருஷ்ணராயபுரத்தில் 26.00 மிமீ, மாயனூரில் 28.40 மிமீ, மைலம்பட்டியில் 6.00 மிமீ, பாலவிடுதியில் 3.00 மிமீ மழை பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரூரை சேர்ந்தவர் பத்மநாபன்,மாட்டு வியாபாரி. இவர், பாலக்காடு அருகே உள்ள வாணியம்குளம் சந்தைக்கு, ஜூலை 11 காலை வந்தார்.அப்போது, மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி தப்பினர். அங்கிருந்தோர் அவரை மீட்டு திருச்சூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.விசாரணையில், கோவை சேர்ந்த சல்மான்கான்,22, அவரது சகோதரர் ஷாருக்கான், 21, முகமதுநாசர், 36, முகமது ரசியா, ராஜா, சையத் அஸ்ஹருதின் என்பது தெரியவந்தது.
கரூர் மாவட்டத்தில் இன்று 6ம் தேதி காலை 8 மணி வரை பதிவான மழை அளவு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ளது. அதன் படி குளித்தலையில் 10மிமீ, கடவூரில் 27மிமீ, பாலவிடுதியில் 18.20மிமீ, மைலம்பட்டியில் 15.2மிமீ என மொத்தமாக 77.2மிமீ மழைப்பதிவாகி உள்ளதாக கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடவூரில் மட்டும் அதிகப்பட்சமாக 27மிமீ மழை பெய்துள்ளது.
கரூரை சேர்ந்த EX அமைச்சர் விஜயபாஸ்கர் நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ளார். அவரது உறவினர் ஆலை, திண்டுக்கல் அரசு ஒப்பந்த பணி அலுவலகம் உட்பட்ட 3 இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்தியது. திண்டுக்கல்லிலிருந்து பரிமாற்றம் செய்த தகவல் தெரிய வந்ததை அடுத்து, கரூர் சிபிசிஐடி, வருவாய் அதிகாரிகளுடன் திண்டுக்கல் அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளும் தனியார் அலுவலகத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
கரூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான் நேரடி சேர்க்கை வரும் ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு 14 முதல் 40 வயதுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.மேலும் விவரங்களுக்கு, கரூரில் இயங்கும் ஐடிஐ நிலையத்திலோ, 04324 222111, 9499055711 என்ற தொலைபேசி எண்ணிலோ அறிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மற்றும் கூட்டு இணைப்பதிவாளர் ஆகியோர் உடன் இருந்தனர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சிறுதானியம் தொடர்பான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.மீ.தங்கவேல் கேடயம் மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.கண்ணன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
குளித்தலை அருகே ஊமை உடையனூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (41). இவர் தனது பெட்டிக்கடை பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சாமிநாதனை கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இதில் ஜாமின் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் . உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஒகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஸி அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடதக்கது.
கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் சிலர் மதுவை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இதனால் கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கடந்த ஜூலை மாதத்தில் மதுவை பதுக்கி விற்ற 275 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 2202 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.