India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர்: ரெங்கபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமியை காணவில்லை என அவரது மனைவி ஜெயா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஜெயா புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சின்ன தாராபுரம் அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் மூலம் உடல் மீட்கப்பட்டது. அது காணாமல் போன பொன்னுசாமி என்பது தெரியவந்தது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அசைவ பிரியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோழிக்கறி கடையில் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு வாங்கவும். உயிர் எடை ஒரு கிலோவுக்கு ரூ.200, தோலுடன் ஒரு கிலோ ரூ.220, தோல் உரித்தது ஒரு கிலோ ரூ.240க்கு விற்பனை ஆகிறது. மட்டன் ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.850 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் வீடுகளில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோர் தங்களது நூல் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் ஏதாவது இருந்தால், அதன் விவரத்துடன் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள், நூல்கள் மாவட்ட மைய நூலகம், கரூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04324-263550 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.
கரூர்: பரமத்தி வேலூரை சேர்ந்த விஜய் (26) என்பவர், 39 வயது பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர், கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணிடம் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்துள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழக பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், மனுக்களை வழங்கினால் அனைவருக்கும் உடனே உரிமைத்தொகை கிடைக்கும்” என்ற தவறான தகவல் பரவி வருகிறது. மேற்படி தகவலை நம்பவேண்டாம். மேலும் இதுபோன்ற தவறான தகவலை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ. தங்கவேல், தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் கரூர் சுங்ககேட் – தாந்தோணிமலை சாலையில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது. மேலும், தாந்தோணிமலை பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வேப்பமரம் முறிந்து சாலையில் விழுந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
கரூரில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு “SEED” அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள பயனாளிகள் மைய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்களை அணுக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான 1330 திருக்குறள் ஒப்பிவிக்கும் போட்டி நடைபெறவுள்ளது. போட்டியில் விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பத்தை (https://tamilvalarchithurai. tn. gov. in) என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கரூரில், திண்ணப்பா தியேட்டர் அருகில் ஆர்த்தி அழகம்மை மஹாலில் நாளை காலை 9 மணிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேச்சு போட்டி நடைபெறுகிறது. என்றென்றும் ஈ.வெ.ரா ஏன்?, அண்ணாதுரை கண்ட மாநில சுயாட்சி, கலைஞர் நவீன தமிழ்நாட்டின் சிற்பி போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.