India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர்: குளித்தலையில் புகழ்பெற்ற கடம்பவனேஸ்வரர் கோயிலில் ஒரு சிறப்பு உண்டு. இங்கு காலையில் வழிபட்டால் காசிக்கே சென்று வழிபட்ட பலன் கிடைக்குமாம். மேலும், இந்தக் கோயிலின் மூலவர் பெண்களுக்கு துணையாக நிற்பவராம். இங்கு பெண்கள் தங்களின் குறைகளை முறையிட்டால் அதை உடனடியாகத் தீர்த்துவைப்பார் கடம்பவனேஸ்வரர் என்பது நம்பிக்கை. கரூர் பெண்களே SHARE பண்ணுங்க.

கரூர் மாவட்டத்தில் அக்னிவீர் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த விருப்பமுள்ள ஆண்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக 10.04.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அறிவித்துள்ளார். இளைஞர்கள் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை, கரூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார்.

கரூர்: தான்தோன்றிமலையில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு Chat GPT பயிற்சி வகுப்பு வரும் ஏப்.12ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும், 99943 22859 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரூரில் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <

கரூர், ராயனுார் பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (43). இவரது மனைவி மஞ்சுளா (40). இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மஞ்சுளா வீட்டிற்கு சென்ற கலையரசன் தகராறில் ஈடுபட்டு, மனைவி மற்றும் அவரது தம்பி சக்திவேல் என்பவரை கத்தியால் குத்தியுள்ளார். இதுதொடர்பாக தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசனை கைது செய்துள்ளனர்.

கரூர்: கடவூர் தாலுகா சேர்வைக்காரன்பட்டி அடுத்த களத்துப்பட்டியைச் சேர்ந்த தம்பதி பழனியம்மாள் – மலைச்சாமி. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனமுடைந்து போன மலைச்சாமி இன்று(ஏப்.1) வீட்டின் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் ஏப்.3-ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
Sorry, no posts matched your criteria.