Karur

News August 24, 2024

கரூரில் ஆக்.,18 வரை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி

image

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி கடந்த 20ல் தொடங்கி வரும் அக்., 18 வரை நடக்கிறது. இப்பணி ஓட்டுசாவடி நிலை அலுவலரால் மேற்கொள்ளப்பட உள்ளது என்று ஆட்சியர் தகவல் அளித்தார்.

News August 23, 2024

கரூரில் சாதனை படைத்த பள்ளி மாணவிகள்

image

கரூர்: தாந்தோணிமலையில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் ஏராளமான பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில், வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 17, 19 வயதிற்கான கபடி, எறிப்பந்து போட்டி மற்றும் 14 வயதிற்கான பூப்பந்து போட்டியில் முதலிடமும் பெற்று நேற்று சாதனை படைத்தனர்.

News August 23, 2024

கரூரில் 2 பெண்களை தாக்கிய நபர் கைது

image

கரூர்: சிந்தாமணிப்பட்டி தரகம்பட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயார் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது கணவர் கண்ணன் என்பவர் வீட்டிற்கு வந்து மனைவியும், மாமியாரும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து பிரியா அளித்த புகாரின் பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று கண்ணனை கைது செய்தனர்.

News August 23, 2024

கரூர்: கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை

image

கரூர்: தோகைமலை காவல் சரகத்திற்குட்பட்ட 23 ஊராட்சிகளில்‌ 250க்கும்‌ மேற்பட்ட கிராமங்கள்‌ உள்ளன. இங்கு திருட்டு, போதை பொருட்களை கடத்தல், வெளியூர்‌ ரவுடிகள்‌ நடமாடுவது உள்ளிட்ட குற்றங்கள் நடந்து வருகிறது. இவற்றை தடுக்க 23 ஊராட்சிகளில்‌ முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த தோகைமலை போலீசார் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள்‌ மற்றும்‌ முக்கிய நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

News August 22, 2024

கரூர்: 2 பெண்கள் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு

image

கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியில் குடிநீர் வரவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் நேற்று தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர். இந்நிலையில், சட்டவிரோதமாக ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்காக கூறி 2 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் மீது சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News August 22, 2024

கரூர்: பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர்: 2 நாட்கள் விடுமுறை

image

குளித்தலை அருகே தேசியமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தையொட்டி மண்ணிற்குள் செல்லும் கூட்டு குடிநீர் குழாயில் நேற்று தீடிரென உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறிய தண்ணீர் பள்ளி வளாகத்திற்குள் முழுவதுமாக நிரம்பியது. இந்த குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் வரை நேற்று மற்றும் இன்று (22.08.2024) ஆகிய 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News August 22, 2024

கரூரில் 3 பேர் மீது போக்சோவில் வழக்கு

image

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராம்பிரசாத் (24) என்பவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ராம்பிரசாத் உள்பட 3 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 21, 2024

BREAKING கரூரை துரத்தும் மழை

image

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவிலிருந்து காலை வரை கனமழை பெய்துள்ளது.

News August 21, 2024

கரூரில் மின்தடை அறிவிப்பு

image

கரூரில் மின்பராமரிப்பு காரணமாக நாளை (ஆக.22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 முதல் மதியம் 3 மணிவரை: ஜெகதாபி, பாலப்பட்டி, சுண்டு குளிப்பட்டி, விராலிப்பட்டி, லந்தக்கோட்டை, முத்துரங்கன்பட்டி, காளையபட்டி, வரவனை, வீரியபட்டி, வில்வமரத்துப்பட்டி, மேலப்பகுதி. காலை 9 முதல் 2 மணிவரை: சஞ்சய் நகர், வேலுச்சாமிபுரம், அரிக்காரன்பாளையம், செல்லறபாளையம் காவலர் குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News August 20, 2024

பாலியல் தொல்லை: கரூர் திமுக பிரமுகர் கைது

image

கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (33). இவர் திமுக கரூர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து ஏமாற்றி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில் சிலம்பரசன் மீது கரூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து இன்று கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!