Karur

News April 6, 2025

கோடையை இதமாக்கும் மண் பானை குடிநீர்!

image

கோடை காலத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதிலிருந்து விடுபட மண்பானையில் வைக்கப்படும் நீரை அருந்தலாம். இதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுகள் ஜீரண சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர் தனபால் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.

News April 6, 2025

கரூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ் !

image

ஐடி துறையில் வேலைக்காக அதிக அளவில் இளைஞர்கள் சென்னைக்கு படையெடுத்து வரும் நிலையில், தற்போது கரூரில் மினி டைட்டல் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த டைட்டில் பார்க்கின் கட்டட வரைபடம் வடிவமைப்பு முடிந்துள்ளது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்கான டெண்டர் அரசால் விரைவில் கோரப்படும்.

News April 6, 2025

கரூரில் கவிழ்ந்த கல்லூரி பஸ் ; 7 பேர் படுகாயம் 

image

கரூர்: அரவக்குறிச்சி அருகே, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்க், நேற்று(ஏப்.5) காலை, 38 மாணவர்களை அழைத்துச் சென்ற கல்லுாரி பஸ், அரவக்குறிச்சி அருகே, சின்ன தொப்பாரப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 7 பேர் காயமடைந்தனர். 

News April 5, 2025

வாழ்வை பாசிட்டிவ் ஆக்கும் விகிர்தீஸ்வரர்!

image

வாழ்வில் பல்வேறு மன அழுத்தம், வெறுமை, சலிப்பு உள்ளவர்களின் எண்ணங்களை முன்னேற்றத்தை நோக்கி நகர்த்தும் கடவுளாக நம்பப்படுபவர் கரூர் மாவட்டத்தில் உள்ள விகிர்தீஸ்வரர். விகிர்தீஸ்வரர் என்றாலே நன்மை தருபவர் என்று அர்த்தம். இந்தக் கோயிலில் இவரை தரிசித்து விட்டுதிரும்பும் போது கூட படி ஏறி தான் செல்ல வேண்டும். அந்த தருணம் முதலே தரிசித்தவர் வாழ்க்கைப் படியும் ஏறுமாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 5, 2025

கரூரில் TNPSC Group 1 தேர்வுக்கான இலவச பயிற்சி!

image

TNPSC Group I தேர்வுக்கான அறிவிப்பு 01.04-2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 01.04.2025 முதல் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் ,நேரடியாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04324- 223555, 9499055912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 5, 2025

கரூர்: திருமண மண்டபம் ஏலத்தில் விற்பனை!

image

கரூர்: கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் மாஸ்டர் திருமண மண்டபமானது (674 சமீ) 22.04.25-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏலம் கோர விரும்பும் நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.25,000/ DD சமர்ப்பிக்க வேண்டும். ஏல நிபந்தனைகள் மாவட்ட இணையதளத்தில் (www.karur.nic.in) உள்ளது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்

News April 4, 2025

திருமண மண்டபம் ஏலத்தில் விற்பனை அறிவிப்பு.

image

கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் மாஸ்டர் திருமண மண்டபமானது (674 சமீ) 22.04.25ம் தேதி பிற்பகல் 3மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏலம் கோர விரும்பும் நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.25,000/ DD சமர்ப்பிக்க வேண்டும்.ஏல நிபந்தனைகள் மாவட்ட இணையதளத்தில் (www.karur.nic.in) உள்ளது ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்

News April 4, 2025

திருமண தடை நீக்கும் புகழிமலை முருகன்

image

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இந்தக் கோயில் முன்னர் மைசூர் எல்லையாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. இங்கு, தொடர்ந்து 12 செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப்பூ மற்றும் செவ்வாழைப்பழம் முருகனுக்கு படைத்து வந்தால் திருமணத் தடை நீங்கி இல்லற வாழ்க்கைக்குச் செல்லலாம் என்பது நம்பிக்கை.

News April 4, 2025

கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 10 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த பணிகளுக்காக <>இங்கு கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!

News April 4, 2025

கரூர்: தனியார் பஸ் மோதி இளைஞர் உயிரிழப்பு

image

கரூர் அருகே கணேசபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (27). இவர் நேற்று கரூரில் இருந்து புலியூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரில் குளித்தலையில் இருந்து, கரூர் நோக்கி வந்த தனியார் பஸ் ராம்குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!