Karur

News August 27, 2024

இன்று மின்தடை இல்லை

image

கரூரில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணமாக மின்தடை ரத்து செய்யப்பட்டது. அதன்படி, குளித்தலை கோட்டத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும், பணிக்கம்பட்டி, நச்சலூர், அய்யர்மலை, மாயனூர், பஞ்சப்பட்டி, சிந்தாமணிப்பட்டி,  பாலவிடுதி, தோகைமலை ஆகிய துணை மின்நிலையத்தில் மின் நிறுத்தம் செய்யவில்லை என அறிவித்துள்ளனர்.

News August 26, 2024

கரூர் டூ சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

image

கரூர் மாநகரின் மையப் பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து செல்கிறது, மூன்று தொழில்களை கொண்ட மாவட்டமாக கரூர் விளங்கி வரும் நிலையில் சென்னைக்கு செல்வதற்கு திருச்சி, சேலம் பகுதிகளுக்கு சென்று சென்னை செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News August 26, 2024

வெள்ளியணை அருகே 3 பேர் கைது

image

கரூர் அடுத்த பாகநத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வெள்ளியணை காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டு, இதில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆவத்திபாளையம் முருகேசன், கந்தன், அசோகன் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News August 26, 2024

கரூரில் நாளை இப்பகுதியில் மின்தடை

image

கரூரில் நாளை(27.8.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், அய்யர்மலை, பஞ்சப்பட்டி, மாயனூர், தோகைமலை, நச்சலூர், வல்லம், பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி, கொசூர், பணிக்கம்பட்டி, வெள்ளியனை ஆகிய துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையங்கள் கீழ் உள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்விநியோகம் இருக்காது.

News August 26, 2024

ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

மைசூரு- செங்கோட்டைக்கு கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி செப் 4, 7ஆம் தேதி இரவு 9.20-க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.50 மணிக்கு செங்கோட்டைக்கு செல்லும். நாமக்கல்லுக்கு 6.38 மணி, கரூருக்கு காலை 7.10-க்கு வந்து விடும். செங்கோட்டையில் இருந்து செப்.5, 8 ஆம் தேதிகளில் 7.45-க்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.30-க்கு செல்லும்.

News August 26, 2024

கரூரில் விளையாட்டுப் போட்டிகள்

image

கரூர் கலெக்டர் தங்கவேல் செய்திக்குறிப்பு வெளியிட்டார். அதில், ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்தின் பிறந்தநாளான ஆக.29ஆம் நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி (ம) பொதுப்பிரிவு ஆண், பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க வரும் 29ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆதார் போன்ற ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

News August 25, 2024

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கரூரில் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதி, இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டுப் போட்டிகள் 29.08.2024 அன்று காலை 8.00 மணி அளவில் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்வார்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 25, 2024

கரூரில் பென்சனர் குறைதீர் கூட்டம்

image

கரூர்: மணவாடி லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில், பிஎஃப் உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (27/8/24 ) நடைபெறுகிறது. கூட்டத்தில் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை உரிய ஆவணங்களுடன் தெரிவித்து தீர்வு பெறலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனர் கமிஷனர் ஆஷிஸ் குமார் தெரிவித்துள்ளார்

News August 25, 2024

கரூரில் அருவாளைக் காட்டி 3.1/2 பவுன் நகை பறிப்பு

image

கரூர்: சேர்வைக்காரன்பட்டி முள்ளிப்பாடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது மனைவியுடன் நேற்று டூவீலரில் கருங்குளம் அருகே வந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அருவாளை காட்டி அவரது மனைவியின் கழுத்தில் இருந்த 3.1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், வையம்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News August 24, 2024

கரூர்: கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை 

image

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மாடக்குடியை சேர்ந்தவர் மாதேஷ் (18). இவர் கரூர் தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரில் உள்ள தனது மாமா வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!