India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கரூரில் அஞ்சூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் இக்கோயிலை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க

கரூரில் பாலமலை முருகன் கோயில் போன்ற பல புகழ்பெற்ற முருகன் கோயில்கள் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். மேலும் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

Ghibli-Style-புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக கரூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா எச்சரித்துள்ளார். சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டி கருப்ப நாயக்கன் குளம் அருகே அரசு அனுமதி இன்றி மண் அள்ளப்பட்டதாக ஆர்டிமலை கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, வெங்கடாசலம், சுப்பிரமணி, சுரேந்திரன் ஆகிய 4 பேர் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

கரூர் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் IEC பணிகளுக்கும் புற சேவை நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினைப் பெற, மாவட்ட மகமை கிராம சேவை மையக் கட்டிடம், காவல் நிலையம் அருகில், காசா காலனி, மாயனூர் என்ற முகவரியை அணுகவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க !

கரூர் அங்கன்வாடியில் காலியாக உள்ள, 206 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணிக்கு, 21 முதல், 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். <

கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று இரவு கரூர், தாந்தோன்றிமலை, காந்திகிராமம் ஆகிய பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. அதேபோல், அரவக்குறிச்சி, நொய்யல், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

சமூக வலைதளங்களில் ஜிப்லி புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி பயன்பாட்டாளர்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. இதில் அங்கீகரிக்கப்படாத ஆப்கள், இணையதளங்கள் மூலம் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், டீப் ஃபேக்குகளில் பயன்படுத்தப்படும் அபாயம் நேரிட அதிக வாய்ப்பு இருக்கிறது, இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டிருந்தாலோ 1930 என்ற எண்ணை அழைக்கலாம் என மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.